தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்: எந்தெந்த மாவட்டம்; அவை என்ன?
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சில தளர்வுகளுடன் ஜுன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் புதிய தளர்வுகள் இல்லை, பழைய கட்டுப்பாடுகளே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சிலப் பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்ப் பரவலைத் தடுக்க, கடந்த மாதம் 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் திங்கள், அதாவது 7ம் தேதி காலை 6 மணி வரை இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உச்சத்தில் இருந்த நோய்ப்பரவல், ஊரடங்கின் காரணமாக குறைந்துள்ளது. 35 ஆயிரத்தை தாண்டி இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 24 ஆயிரமாக குறைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரம் வரை இருந்தது. இப்போது அது 2 ஆயிரமாக குறைந்துள்ளது.
தமிழ் நாட்டில் பரவலாக நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர் ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு, ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்து வருகிறது.
எனவே, இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரத்தில் மக்கள் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், கீழ் கண்ட அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் 7-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
- தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம் மற்றும் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- மீன் சந்தைகள் மொந்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட ஒருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
- இறைச்சித் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் பணியாளர்களுடன் நடைமுறைகளைப் நிலையான பின்பற்றி 50 சதவிகிதம் வழிகாட்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ள, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.
* தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
* இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses} மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் பணியாளர்களுடன் நிலையான 50 சதவிகிதம் வழிகாட்டு நடைமுறைகளை அனுமதிக்கப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.:
* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
* தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
* மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
• மின் பொருட்கள் (electrical goods) பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஓயர்கள் விற்பனை செய்யும். கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும்.
• கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகன விநியோகர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாடகை வாகனங்கள், ஆட்டோக்களில் இ-பதிவுடன் மற்றும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
பொது
* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசரக் கரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
* கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு. நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும். மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும். 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படும்.
* தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில். இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.