Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

நீரில் மூழ்கிய 34 வயது மனிதரை காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

நீரில் மூழ்கிய 34 வயது மனிதரை காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

Monday January 07, 2019 , 2 min Read

அமேரிக்கா, மின்னெசோட்டாவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆத்விக் என்னும் 11 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கிய 34 வயது மனிதரை காப்பாற்றியுள்ளார்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு நீச்சல் தெரியவில்லை என்றாலும் நீச்சல் அடிக்க முயற்சி செய்து உள்ளார். ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும் குளத்தின் ஆழாமான பகுதிக்குச் சென்ற அவரால் மீண்டும் வெளியே வர முடியாமல் அங்கேய நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

பட உதவி: சி என் என்

அப்பொழுது அதே குடியிருப்பில் வசிக்கும் ஆத்விக் மற்றும் அவரது பெற்றோர் ரகு மற்றும் லலிதா அக்காட்சியை பார்க்க அனைவரும் என்ன செய்வதென்று திகைத்து போயினர். பலர் உதவிக்கு வந்த நிலையிலும் எவராலும் அழமான பகுதிக்கு சென்று அவருக்கு உதவ முடியவில்லை. குளத்தின் மூழ்கிய அந்த நபர் அடியில் சென்றதால் மேலிருந்து கைக் கொடுத்து தூக்கும் நிலையில் எவரும் இல்லை.

அப்பொழுது லலிதா நீச்சல் தெரிந்த தனது மகனை குளத்தில் குதித்து காப்பாற்ற சொல்லியுள்ளார். 30 கிலோ எடை உள்ள சிறுவனால் 77 கிலோ எடை உள்ளவரை தண்ணீரில் இருந்து வெளியே இழுத்து வர முடியுமா? இதே கேள்வி தான் ஆத்விக்கும் கேட்டுள்ளார்.

“அம்மா என்னை குத்திக்க சொல்லியப்போது அவரது எடையை இழுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது, இருப்பினும் உடனடியாக குளத்திற்குள் குதித்தேன்,” என்கிறார் ஆத்விக்கு சிஎன்என்-ற்கு அளித்த பேட்டியில்.

8 அடி ஆழத்தில் தன்னை விட 50 கிலோ எடை அதிகம் உள்ளவரை இழுக்க சிரமப்பட்டாலும் தனது முழு முயற்சியையும் கொடுத்து மேலே  இழுத்து வந்துள்ளார் இந்த இளம் ஹீரோ.

பெற்றோர் உடன் ஆத்விக், பட உதவி: சி என் என்

மயக்கநிலையில் இருந்த அவருக்கு ஆத்விக்கின் மாமா சிபிஆர் செய்து முதல் உதவி செய்தார், மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டவர் பூரண குணமடைந்துள்ளார்.

அதன் பின் அந்த வாரத்தில் காவல் துறை அதிகாரிகள் ஆத்விக் வீட்டிற்கு வந்து பரிசுகளும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பேசிய காவல் அதிகாரி,

“சிறியவர் ஒரு பெரியவரை நீச்சல் குளத்தில் காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்த சம்பவம் இதுவே முதல் முறையாக இருக்கும். பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருப்பது அவரின் அதிர்ஷ்டம் என தெரிவித்தார்.”

ஆத்விக் அந்நேரத்தில் துணிச்சலாக செயல் படவில்லை என்றால் நிச்சயம் அது மகிழ்ச்சியான முடிவாக இருந்திருக்காது என நிகழ்வை கண்ட அனைவரும் தெரிவித்துள்ளனர்.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: சி என் என்