டிசம்பருக்குள் 1.2 லட்சம் புதிய விற்பனையாளர்கள் இணைப்பு: Flipkart-ன் புதிய இலக்கு!
ஏற்கனவே 75,000 பேரை இணைத்து புதிய முயற்சி!
இந்தியாவின் முன்னணி இணையவழி சந்தையான ஃபிளிப்கார்ட், டிசம்பர் 2021க்குள் 1.2 லட்சம் புதிய சிறு மற்றும் குறு விற்பனையாளர்களை அதன் தளத்தில் சேர்க்க இலக்கு வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த இலக்கின் ஒருபகுதியாக ஏற்கனவே 75,000 பேரை கடந்த சில மாதங்களில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்திருக்கிறது. தற்போது, ஃப்ளிப்கார்ட் சந்தை 3.75 லட்சம் விற்பனையாளர்களுக்கு டிஜிட்டல் வர்த்தகத்தை ஆதரிக்கிறது, மேலும் இ-காமர்ஸ் நிறுவனமானது இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 4.2 லட்சம் விற்பனையாளர்களிடம் கொண்டு செல்ல உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
ஃபிளிப்கார்ட்டின் தனது அறிக்கையில்,
“இந்த திட்டத்துக்கு MSME-களிடம் இருந்து ஊக்கமளிக்கும் வகையில் நல்ல பதில் கிடைத்து வருகிறது. அவர்கள் தங்கள் வணிகத்தை ஆன்லைனில் மேற்கொள்ள விரும்புகிறார்கள். புதிய விற்பனையாளர்கள் முக்கியமாக அடுக்கு II மற்றும் III சந்தைகளான ஆக்ரா, இந்தூர், ஜெய்ப்பூர், பானிபட், ராஜ்கோட், சூரத் மற்றும் பலவற்றிலிருந்து வருகின்றனர்.
ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை கார்ப்பரேட் விவகார அதிகாரி ரஜ்னீஷ் குமார் கூறுகையில்,
”டிஜிட்டல் வர்த்தகத்தின் மதிப்பு மற்றும் சிறு வணிகங்கள் வேகமாக வளரக்கூடிய சாத்தியங்கள் நன்கு அறியப்பட்டவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஃபிளிப்கார்ட் இணையவழி சந்தையில் சிறு வணிகங்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்து, துரித வளர்ச்சியைக் காண்பது ஊக்கமளிக்கிறது.
இந்த பண்டிகைக் காலத்தில், எம்எஸ்எம்இ மற்றும் விற்பனையாளர் சுற்றுச்சூழல் அமைப்புகள் நாடு முழுவதும் இன்னும் நெகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வந்துள்ளன, மேலும், அவர்கள் எங்கள் கற்றல், நிதி, செயல்பாட்டு மற்றும் வணிகத் தேவைகளை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த 1.2 லட்சம் புதிய விற்பனையாளர்கள் ஒவ்வொருவரும் கூடுதலாக நான்கு லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை சுற்றுச்சூழலில் உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது," என்றுள்ளார்.
இதனிடையே, பண்டிகைக் காலங்களில் இந்த விற்பனையாளர்களின் பணப்புழக்கம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் வணிகத் தொடர்ச்சியை ஆதரிக்க, next-day payment programme எனப்படும் வாங்கும் பொருட்களுக்கு மறுநாள் பணம் செலுத்தும் வசதியை ஃப்ளிப்கார்ட் செயல்படுத்தியுள்ளது.
இது விற்பனையாளர்கள் தங்கள் ஆர்டர் கட்டணங்களை ஒரு நாளுக்குள் பெற அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தில் விற்பனையாளர்கள் 30 நாள் இலவச சோதனையைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில்: திம்மையா | தமிழில்: மலையரசு