உங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என தெரிய வேண்டுமா...?
இதோ வந்துவிட்டது பள்ளிகளுடன் பெற்றோர்களை இணைக்கும் ஆப்...
பள்ளி முடித்து வீடு திரும்பிய பின் வீட்டுப்பாடத்தில் இருந்து தப்பிக்க நாள்காட்டியை பள்ளியில் மறந்துவிட்டேன் போன்ற சாக்குகளை சொல்லி அம்மாவிடம் இருந்து இன்றைய கால குழந்தைகளால் தப்ப முடியாது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தால் அதை சார்ந்து மற்ற துறைகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று பள்ளியையும் பெற்றோர்களையும் இணைக்கும் வகையில் தொடர்புநிலை செயிலி ஒன்றை உருவாக்கியுள்ளது 'கென்சில்’ 'Kencil' நிறுவனம்.
கென்சில், பள்ளிக்கும் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பாலமாக அமையும் ஓர் செயிலி. இந்த ஆப் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளின் அட்டெண்டன்ஸ், தின வீட்டுப்பாடம், தேர்வு தேதிகள், முடிவுகள், பள்ளியின் விழாக்கள் என சகலத்தையும் தெரிந்துக்கொள்ளாம். இதன் மூலம் குழந்தைகளின் படிப்பு மற்றும் செயல்கள் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும்.
கென்சில் செயிலி நிறுவனத்தின் நிறுவனர் நரேந்திரன், மென்பொருள் பொறியியல் படிப்பை முடித்த இவர் கல்லூரியின் போதே ஸ்டார்ட்-அப் மீது ஆர்வம் ஏற்பட்டு மாணவர்களுக்கான நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். தனது ஸ்டார்ட்-அப் மூலம் ’Bulk SMS’ சேவையை பல நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
“இந்த பல்க் எஸ் எம் எஸ் சேவையை எதிர்பார்த்த எங்கள் வாடிக்கையாளர்களில் 80% நிறுவனங்கள் கல்வி அமைப்புகளே. இவர்களுக்கு ஏன் இந்த சேவை அதிகம் தேவைப்படுகிறது என்கிற ஆர்வமே கென்சில் உருவாகக் காரணம்,” என்கிறார் நரேந்திரன்.
அந்த கேள்விக்கு விடை தேட, கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இணைப்பில் இருக்க விரும்புகின்றனர் என்பதை தெரிந்துக்கொண்டார் இவர். கல்லூரி காலத்தில் இது நடந்ததால் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல் கல்லூரி முடிந்தப்பின் ஒரு பெரு நிருவனத்தில் பணிக்கு அமர்ந்துள்ளார். ஆனால் இந்த வேலையில் முழுமனதோடு செயல்பட முடியவில்லை என்பதால் அந்நிறுவனத்தை விட்டு மற்றொரு ஸ்டார்ட் –அப் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். தொடர்ந்து இரு ஸ்டார்-அப் களுடன் பணிப்புரிந்த இவர் தானே ஓர் நிறுவனம் அமைக்க முடிவு செய்துள்ளார்.
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ஸ்ரீநாத்துடன் பல யோசனைகளை பகிர்ந்துக் கொள்வதாக தெரிவிக்கிறார் நரேந்திரன். அப்படி ஓர் உரையாடலின் போது தற்பொழுது இருக்கும் ஏதேனும் பிரச்சனைக்கு தீர்வுக் காண வேண்டும் என பேசத் துவங்கி இன்று துணை நிறுவனர்கள் ஆகிவிட்டோம் என்கிறார்.
“எல்லாத் துறைகளும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி கண்டாலும் தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருப்பது பள்ளி நிறுவனங்கள் மட்டுமே. என் வங்கி கூட என்னிடம் தினமும் தொடர்பில் உள்ளது ஆனால் என் குழந்தைகள் படிக்கும் பள்ளி அப்படி இல்லை...”
இந்த சிக்கலை எங்களால் தீர்க்க முடியுமா என்று பார்த்தோம். பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் தொடர்புகளை இன்னும் மேம்படுத்த என்ன செய்யவேண்டும் என்பதை மட்டுமே தாங்கள் யோசித்ததாக தெரிவிக்கிறார்.
“கல்வித்துறை என்பது நாம் அனைவரும் தெரிந்து பழகிய ஒன்று ஆனாலும் நிர்வாகம் பற்றிய போதிய தகவல் இல்லை என்பதால் எனக்கு தெரிந்த கல்வித்துறையை சேர்ந்த அனைத்து வயதினரையும் ஒன்று திரட்டி அலசினோம்”
பெற்றோருக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தேவையானவற்றை கருத்தில் கொண்டு ஓர் செயிலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதை கல்வி வல்லுனர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் என அனைவரிடமும் கொடுத்து கருத்துக்களை பெற்று பல மாற்றங்கள் செய்து ஒரு வருடம் கழித்தே கென்சில் செயிலியை அறிமுகப்படுத்தியுள்ளனர் இவர்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக செயிலியை அறிமுகப்படுத்திய இவர்களுக்கு வாடிக்கையாளர்களை பெறுவது கடினமாக இல்லை. தனது கல்லூரியின் போது இவர்களின் சேவையை பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்தே செயிலியை மெருகேற்றியதால் அது சவாலாக இல்லை என தெரிவிக்கிறார்.
“ஆனால் மற்ற நிறுவனங்கள் போல எங்களுக்கு சவாலாக அமைந்தது செயிலியின் விலை குறித்து நிறுவனங்களுடன் பேசுவது தான். அதனால் ஒரு மாதம் இலவச சேவை அளித்தோம்; பெற்றோகளுக்கு பிடிக்கவில்லை என்றால் தொடர வேண்டாம் என்ற நிபந்தனையுடன்,” என்கிறார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு பெற்றோர்களே இச்செயிலியின் சேவையை எதிபார்க்க கென்சில் செயிலியின் மதிப்பை நிறுவனங்கள் உணர்ந்ததாக தெரிவித்தார். தற்போது சொந்த சேமிப்பில் இருந்து நிறுவனத்தை துவங்கிய இவர்கள் இதுவரை 40 லட்சம் வரை வருவாய் ஈடியுள்ளனர். முதலீடுகள் பெறுவதில் விருப்பம் இல்லை என தெரிவிக்கிறார் நரேந்திரன்.
30 கல்வி நிறுவனங்களுடன் இணைந்திருக்கும் இவர்கள், கேரளா மற்றும் இதர தெற்கு இந்திய மாநிலங்களிலும் தங்கள் சேவையை தொடங்கவுள்ளனர். அடுத்தவருடம் வட மாநிலங்களிலும் கென்சில் ஆப் செயல்படும் என தெரிவிக்கிறார் நிறுவனர்.
செயலி பதிவிறக்கம் செய்ய: Kencil