2022ம் ஆண்டை எதிர்கொள்ள முகேஷ் அம்பானிக்கு வழிகாட்டிய 5 புத்தகங்கள்!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, 2021ம் ஆண்டை புரிந்து கொண்டு 2022ம் ஆண்டுக்கு தயாராக வழிகாட்டியை 5 புத்தகங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, 2021ம் ஆண்டை புரிந்து கொண்டு 2022ம் ஆண்டுக்கு தயாராக வழிகாட்டியை ஐந்து புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அவரது பரிந்துரைகள் இதோ:
அம்பானிக்கு வழிகாட்டிய 5 புத்தகங்கள்
1. டென் லசன்ஸ் பிரம் ஏ போஸ் பாண்டமின் வேர்ல்டு (Ten Lessons for a Post-Pandemic World)
பரீத் ஜக்காரியா எழுதிய இந்த புத்தகம், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அண்மைக்கால ஆபத்தான நிகழ்வுகள் இடையிலான ஒப்புமை அம்சங்களை சுட்டிக்காட்டி, நீடித்த தன்மை இல்லாத வாழ்வியல் முறைகள் மற்றும் பலவீனமான நிர்வாக அமைப்புகளில் இருந்து சர்வதேச நெருக்கடிகள் உண்டாவதாக விவரித்துள்ளார்.
உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என நீங்கள் உணரும் இந்த பிரச்சனைகள், செயல்திறன் மிக்க தலைமை, வாழ்வியல் முறை மாற்றம், சர்வதேச ஒத்துழைப்பு மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும். நோய் பரவல் தவிர்க்க முடியாதவை என்றாலும், பெருந்தொற்றுகள் தவிர்க்க கூடியவை என்று புத்தகம் சொல்கிறது.
2. பிரின்சிபல்ஸ் பார் டீலிங் வித் சேஞ்சிங் வேர்ல்டு ஆர்டர் (Principles for Dealing With the Changing World Order: Why Nations Succeed and Fail)
ரே டேலியோ எழுதிய இந்த சுவாரஸ்யமான புத்தகம், 500 ஆண்டு கால வரலாற்று காலத்தில், முக்கிய நாடுகளின் வெற்றி, தோல்விக்கு காரணமான விஷயங்களை விவரிக்கிறது. இப்போது உள்ளதை விட எதிர்வரும் காலம் ஏன் வேறுபட்டிருக்கும் என்றும் புத்தகம் விளக்குகிறது.
தொழில்முனைவோர், அதிகாரிகள், முக்கியமாக இளைஞர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்.
3. தி ரேகிங் 2020 : (The Raging 2020s: Companies, Countries, People—and the Fight for Our Future)
அலெக் ராஸ் எழுதிய இந்த புத்தகம், அரசாங்கம், வர்த்தகம், மக்கள் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமான சமூக ஒப்பந்தம், பல காலமாக நவீன நாகரீகத்தை தழைக்கச் செய்வது, டிஜிட்டல் யுகத்தில் மாறி வருவது குறித்து அலசுகிறது. இந்த மாற்றத்திற்கு காரணமான விஷயங்கள் மற்றும் வருங்காலம் குறித்து முன்னணி சிந்தனையாளர்களின் நேர்காணல்களையும் கொண்டிருக்கிறது.
4. 2030: ஹவ் டுடேஸ் பிக் டிரென் வில் கொலைடு அண்ட் ரிஷேப் தி பியூச்சர் ஆப் எவ்ரிதிங் (2030: How Today’s Biggest Trends Will Collide and Reshape the Future of Everything)
மவுரோ குய்லென் எழுதியுள்ள இந்த புத்தகம், 2030ல் உலகம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளை அளிக்கிறது. குறிப்பாக, மக்கள் தொகை மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை குறிப்பிடுகிறது. நகரமயமாக்கல், தொழில்நுட்பம், சிறுவேலை பொருளாதாரம், தானியங்கிமயம் பற்றியும் பேசுகிறது.
5. பிக் லிட்டில் பிரேக்த்ரூஸ் (Big Little Breakthroughs: How Small, Everyday Innovations Drive Oversized Results)
ஜோஷ் லிங்கர் எழுதிய இந்த புத்தகம் தொழில்முனைவோர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது. சின்ன சின்ன படைப்பூக்க செயல்கள் வர்த்தகத்தில் பெரும் பலனை அளிப்பதை புத்தகம் குறிப்பிடுகிறது. சிறு புதுமையாக்கத்தை உருவாக்கி கொள்வதன் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், சவால்களை வென்று, வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Edited by Induja Raghunathan