‘ஆத்ம நிர்பர் பாரத்’ இந்தியர்களின் மந்திரம் ஆகி உள்ளது- நரேந்திர மோடி
74வது சுதந்திர தின விழாவில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி, 74வது சுதந்திர தினத்தில் உரையாற்றியபோது, இந்தியாவின் பங்கை சர்வதேச பொருளாதாரத்தில் உயர்த்த உதவும் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ முழக்கம் மக்கள் மத்தியில் பிரபலமாகி, அது ஒரு மந்திரமாக பரவி வருவதாக தெரிவித்தார்.
“இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தியா மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து, முடிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருப்போம்,” என கேள்வி எழுப்பினார்.
ரெட் ஃபோர்டில் நடைப்பெற்ற இந்திய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் ‘தற்சார்பு இந்தியா’-வுக்கு தயாராக வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் வகையில் பல திட்டங்களை அரசு எடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார் பிரதமர். நாட்டுக்குச் சுதந்திரம் வாங்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவிட்டு தன் உரையைத் தொடங்கினார் நரேந்திர மோடி. சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ஆன்மீக தத்துவர் ‘அரபிந்தோ கோஸ்’-ன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை நினைவுக் கூர்ந்தார் அவர்.
கொரோனாவை எதிர்த்து போராடி வரும் ‘கொரோனா வாரியர்ஸ்’ என அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிகள் வெற்றி அடைந்து, இந்த நோய் தொற்றை 130 கோடி இந்தியர்கள் வெல்ல வழி பிறக்கும் என்றார் மோடி.
‘தற்சார்பு இந்தியா’ பற்றி விவரித்த மோடி,
“இதில் பல சவால்கள் குறித்து சந்தேகங்கள், கவலைகள் எழுந்த போதிலும், இந்த ‘லட்சக்கணக்கான சவால்களுக்கு’, ‘கோடிக்கணக்கான தீர்வுகளை’ இந்திய குடிமக்கள் வழங்குவார்கள். ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ என்பதே இந்த சுதந்திர இந்தியாவின் மந்திரமாக இருக்கவேண்டும்,” என்றார்.
விவசாயிகளுக்கு அரசு பல தளர்வுகளை அறிவித்ததன் மூலம், அவர்கள் தங்களின் பொருட்களை அவர்களின் சொந்த விதிகளுக்கு ஏற்ப வர்த்தகம் செய்து கொள்ள முடிகின்றது.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை வேரறுக்க பல்வேறு ஆட்சியாளர்களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், விரிவாக்க சக்திகளுக்கு ஒரு சவாலாக மாறியது, என்றார்.
தகவல்: பிடிஐ