3ம் காலாண்டில் 23 பில்லியன் வருவாய் ஈட்டி அலிபாபா குழுமம் சாதனை!
சிங்கில்ஸ் டே வர்த்தகம் மூலம் அலிபாபா குழுமம் வருவாயில் 58 சதவீத உயர்வு கண்டுள்ளது.
சீன முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம், 2019 டிசம்பர் வரையான காலாண்டில், ஆண்டு அடிப்படையில் 38 சதவீத வளர்ச்சி அடைந்து, 23.12 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிகர லாபம் 58.3 சதவீதமாக உயர்ந்து, 7,514 மில்லியன் டாலராக இருந்தது.
சாதனை படைத்த 'சிங்கில்ஸ் டே ஷாப்பிங்' மற்றும் அதிகரிக்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் வருவாய் ஆகியவையே லாபம் உயர்வதற்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்களுடைய வணிகர்கள் மற்றும் பார்ட்னர்களுக்கு மற்றொரு சாதனை 11.11 உலக ஷாப்பிங் திருவிழாவாக அமையும் வங்கையில் எங்கள் டிஜிட்டல் பொருளாதாரம் புதிய உச்சியை தொட்டுள்ளது. பயனர் தொடர்புக்கான தொடர் முதலீடு, குறிப்பாக சமூக வர்த்தக உள்ளடக்கம் மூலம் கவனம் வாடிக்கையாளர் பரப்பில் வலுவான பலனை அளித்துள்ளது,” என அலிபாபா குழும தலைவர் மற்றும் சி.இ.ஓ டேனியல் ஜாங் கூறியுள்ளார்.
“இந்த வேகமான வளர்ச்சியின் காரணமாக, எங்களுடைய கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை முதல் முறையாக ஒற்றை காலாண்டில் 10 பில்லியலுக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் இறுதியில் அலிபாபா தனது சாதாரண பங்குகளை, சரவதேச அளவிலான 575 சாதாரண பங்கு வெளியீட்டுடன் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. சர்வதேச மற்றும் ஹாங்காங் பொது வெளியீட்டை இது உள்ளட்டக்கியிருந்தது. இதன் மூலம் திரட்டப்படும் 13 பில்லியன் டாலரை நிறுவனம், பனாளிகள் வளர்ச்சி மற்றும் தொடர்பை மேம்படுத்த, வரத்தகங்கள் டிஜிட்டலுக்கு மாறுவதை ஊக்குவிக்கத் தேவையான உத்திகளை வகுக்க பயன்படுத்த உள்ளது.
“நவம்பரில் ஹாங்காங் பங்குச்சந்தை பிரதான போர்டில் வெற்றியகரமாக பங்குகளை பட்டியலிட்டு, வலுவான காலாண்டு முடிவுகளை அளித்திருக்கிறோம்,” என அலிபாபா குழும முதன்மை நிதி அதிகாரி மேகி வூ தெரிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில், அலிபாபா டிஜிட்டல் பொருளாதாரம் முழுவதும் எங்கள் வாடிக்கையாளர்கள், பார்ட்னர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சேவைகளில் முதலீடு செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.
சீன ரீடைல் சந்தையில், அலிபாபாவின் வருடாந்திர தீவிர வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 711 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் இது 693 மில்லியனாக இருந்தது. மொபைல் மூலமான வருடாந்திர தீவிரப் பயனாளிகள் எண்ணிக்கை டிசம்பரில் 824 மில்லியனாக உயர்ந்தது.
சீனாவை உலுக்கியிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்ட டேனியல் ஜாங்,
“இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவாக அலிபாபாவின் சக்திவாந்த வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரணப்பொருட்கள் கிடைக்க வழிச் செய்தோம்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வான் | தமிழில்: சைபர்சிம்மன்