கொரோனாவால் கல்வி பாதித்த ஏழை மாணவர்களுக்கு 20,000 டிஜிட்டல் சாதனங்கள் வழங்கும் அமேசான்!
மக்களும் பங்களிப்பு செய்யலாம்!
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கு வித்திடும் நோக்கில் 20,000 டிஜிட்டல் சாதனங்களை நேரடியாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
அமேசான் இந்தியா தனது 'டெலிவரி ஸ்மைல்ஸ்' முன்முயற்சியின் கீழ் 150க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமேசான் இந்தியா,
”இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் அமைப்புக்களில் 150ல் 100 அமைப்புகள் லாப நோக்கமற்ற அமைப்புகளாக உள்ள அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அமேசானின் தன்னார்வத் திட்டத்தின் ஒரு பகுதியாக பணியாளர் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்," என்று தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் மக்கள் பங்களிப்பு செய்யலாம் என்றும் அமேசான் இந்தியா அறிவித்துள்ளது. ரொக்கமாக பணம் வழங்கியும் மக்கள் பங்களிப்பு செய்யலாம் அல்லது தங்களின் பழைய மொபைல் போன்களை அளித்தும் பங்களிப்பு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மனிஷ் திவாரி இதுதொடர்பாக கூறுகையில்,
"கோவிட் -19 தொற்றுநோய் கல்வித் துறையில் மட்டுமின்றி அத்தியாவசிய சேவைகளை அணுகுவதற்கும் டிஜிட்டல் பிரிவை மையமாகக் கொண்டுள்ளது,” என்றார்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளிகளுடன் சேர்ந்து, டிஜிட்டல் சாதனங்கள் மூலம் இளைஞர்களுக்கு ஆன்லைன் கல்வி மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து அணுகுவதன் மூலம் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
”அமேசான் நாட்டின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதில் உறுதியாக உள்ளது. திறமையும் ஆர்வமும் அனைத்து இளைஞர்களிடமும் பரவியிருந்தாலும், வாய்ப்பு இல்லை என்பதை நாங்கள் அறிவோம். கணினி அறிவியல் கல்வி முயற்சியான அமேசான் எதிர்கால பொறியாளர் திட்டம் மூலம் இந்தியாவில் தரமான கணினியை அணுகுவதை நோக்கமாகக் கொண்டது," என்று கூறி உள்ளார்.
தொகுப்பு: மலையரசு