Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

தொண்டு நிறுவனங்களுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் தானம் அளித்த தொழிலதிபர் அசிம் ப்ரேம்ஜி...

தொண்டு நிறுவனங்களுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் தானம் அளித்த தொழிலதிபர் அசிம் ப்ரேம்ஜி...

Thursday April 25, 2019 , 2 min Read

அசிம் ப்ரேம்ஜி; இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர், விப்ரோ நிறுவனத்தின் 34 சதவீத பங்குகளை சமூக பணிகளுக்காக தானமாக வழங்கியுள்ளார். இந்த பங்குகளின் மதிப்பு ரூ.52750 கோடியாகும். அதே சமயம், ப்ரேம்ஜி தனது நிறுவனம் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள பங்கு மதிப்பும் 1.45 கோடி ரூபாய் அளவு உயர்ந்து, விப்ரோவின் பொருளாதார பங்கு 67 சதவீதம் ஆகியுள்ளது.

இது குறித்து அசிம் ப்ரேம்ஜி பவுண்டேஷன் கூறியுள்ளதாவது,

“பங்குகளின் பயன்கள் அனைத்தும் மனிதநேய காரியங்களுக்கு செலவிடப்படும். விப்ரோவின் 34% லாபத்தில் இருந்து இந்த பணிகள் செய்யப்படும். அசிம் ப்ரேம்ஜி பவுண்டேஷனில் மற்ற சில நிறுவன பங்குகளும் உள்ளது. விப்ரோ நிறுவன வருவாயில் இருந்து 67% அசிம் ப்ரேம்ஜி பவுண்டேஷனுக்கு அளிக்கப்படுகிறது.”

அசிம் ப்ரேம்ஜியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. ’கார்ப்பரேட் ராபின்ஹுட்’ என்று அவரை மக்கள் அழைத்தனர். ஆனால் அவரின் இந்த செயல் முதன்முறை அல்ல. கடந்த காலங்களிலும் அவரது அறக்கட்டளை மூலம் தேவைப்படுவோருக்கு கொடுத்து உதவியுள்ளார்.

நாட்டின் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி வழங்கிட அசிம் ப்ரேம்ஜி பவுண்டேஷன் உள்ளூர் அரசுகளுடன் கைக்கோர்த்து பல திட்டங்களை நடத்துகிறது. உத்தராகண்ட், ராஜஸ்தான், சட்டிஸ்கர், புதுச்சேரி, தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் கிழக்கு மாநில பகுதிகளில் இவர்களின் அறக்கட்டளை இதை செயல்படுத்தியுள்ளது.

பென் & கம்பனி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த 5 ஆண்டுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு 100 மில்லியன் அளவிற்கு தானம் அளிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் 4% குறைந்துள்ளது. அதே சமயம் 35 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நபர்கள் 12% அதிகரித்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

அசிம் ப்ரேம்ஜி பற்றி பல அரிய விஷயங்கள் உள்ளன. மும்பை குஜராத்தி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த அவர் மிகவும் எளிமையான குணம் கொண்டவர். பெரும்பாலும் அவர் விமானத்தில் எக்கானமி க்ளாசிலே பயணிப்பார். நிறுவனத்துக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுசில் தங்குவார். நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதை தவிர்த்திடுவார். இவர் இந்தியாவின் டாப் பணக்காரராக 1999 முதல் 2005 வரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.