‘அழகு ஆன்மாவில் உள்ளது, தலைமுடியில் இல்லை’ - அரிய நோயால் முடங்காத கேட்கி ஜானி!
அலோபீசியா நோயை தோற்கடித்து ‘திருமதி இந்தியா’ உலகப் போட்டியில் பட்டத்தை வென்ற கேட்கி ஜானியின் கதையை அறிவோம்.
‘அழகு ஒருவரின் ஆன்மாவில் இருக்கிறது, முடியில் இல்லை...!
அலோபீசியா நோயை தோற்கடித்து ‘திருமதி இந்தியா’ உலகப் போட்டியில் பட்டத்தை வென்ற கேட்கி ஜானியை பற்றி பார்ப்போம்
நம் சமுதாயத்தில், வழுக்கை இருக்கும் பெண்ணை ஒரு கேலிக்கூத்தாகக் கருதுகின்றனர். வழுக்கை உள்ளவர்களில் சில சதவீதம் பேர் மட்டுமே தலையை மொட்டையடித்துக் கொள்கிறார்கள், மீதமுள்ளவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்வதற்கும் அதைத் தடுக்க நேரம், பணத்தை செலவழிக்கவும், முயற்சி எடுப்பதற்கும் போராடுகிறார்கள். ஆனால் இதற்கும் சில விதிவிலக்குகள் உள்ளன. கேட்கி ஜானி அவர்களில் ஒருவர்.
கேட்கி ஜானி ஒரு அலோபீசியா நோயாளி, தலைமுடியை இழந்தவர் மற்றும் திருமதி இந்தியா சர்வதேச அழகுப் போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்ற முதல் அலோபீசியா நோயாளி ஆவார்.
கேட்கி ஜானி அகமதாபாத்தில் பிறந்தவர் மற்றும் புனேவைச் சேர்ந்த அரசு ஊழியர். இரண்டு குழந்தைகளின் தாய். இவர் தனது நாற்பது வயதில் ஒன்றரை மாதம் முடியில்லாமல் இருந்தார்; மக்கள் அவரின் வழுக்கைத் தலையை கேலி செய்யத் தொடங்கினர்.
கேட்கி மற்ற குடும்பப் பெண்களைப் போல சாதாரண வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் ஒரு நாள், அவர் தலையில் ஒரு புள்ளி அளவிலான வழுக்கை இருப்பதைக் கண்டார் மற்றும் அவரது தலைமுடி தலையணையில் உதிரத் தொடங்கியது. அவர் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தார், உடனே மருத்துவரைச் சந்தித்தார். அவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை.
கேட்கி ஜானிக்கு அலோபீசியா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 8-10 மாதங்களில் அவரின் முழு உடலிலிருந்த ஒவ்வொரு முடியும் கொட்டியது.
"என் தலைமுடியை இழந்த பிறகு தான், சிகிச்சையைத் தொடங்க வேண்டியதாகியிருந்தது. இரண்டரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஆலோசனை, மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டன,” என்றார் கேட்கி.
அவர் அலோபீசியாவால் பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்திற்குட்பட்டார். இது மிகவும் இயற்கையான ஒன்று, ஆனால் அதிலிருந்து வெளியே வர அவர் முடிவு செய்தார். பின்னர் அவர், தான் முடி இல்லாத மொட்டையானவர் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார்.
இதற்கெல்லாம் அப்பால், கேட்கி சமூகத்தின் முன்பு எல்லா வேதனையான கேள்விகளையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.
"ஆம், நான் ஒரு வழுக்கையானவள், ஆனால் அழகான இதயம் கொண்டவள், என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம் என உணர்ந்தார். ஏற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல, பல நாட்கள் அழுதுகொண்டே இருந்தார், வெளியே செல்ல பயந்தார், கண்ணாடியில் கூட தன்னை பார்க்காமல் முடங்கிப் போய் இருந்துள்ளார்.
அவரது மகள் புன்யாஜா, ஒரு பிசியோதெரபிஸ்ட். கேட்கி எப்பொழுதும் அழகாக இருப்பதாகவும், சமூகம் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றும் கூறினார்.
நடந்ததை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற கேட்கி முடிவு செய்தார். சிறுநீரகங்களில் நீண்டகால பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஸ்டீராய்டுகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டு, தனது அழகான முகம் மற்றும் பளபளப்பான வழுக்கைத் தலையுடன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்தார்.
லேட்கி மேலும் கூறியதாவது,
"இது முதலில் எளிதானது அல்ல, ஏனென்றால் மக்கள் என்னிடம் வந்து எனக்கு புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் ஆபத்தான நோய் இருக்கிறதா என்று கேட்டார்கள்."
ஒரு மொட்டைத் தலையுடைய பெண் வாழ்வதைவிட, உயிரை விடுவதை தவிர இந்த உலகில் வழி இல்லை என்று சொல்ல ஆரம்பித்தார்கள். கூடுதலாக, என் தவறுகளுக்கு மிகவும் சபித்தார்கள். நான் ஒரு விதவையா என்று என்னிடம் கேட்டார்கள். சமுதாயம் என்னை ஏற்றுக்கொள்ளாததை என்னால் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் அந்நியர்கள் என்னைக் கேலி செய்தனர்.
நான் எனது விதியை ஏற்றுக்கொள்கிறேன் என்று எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது தலையில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தேன், பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்ற எனது நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றினேன்.
பச்சை குத்திக்கொள்வது எனது நம்பிக்கையை மீண்டும் பெற உதவியது, ஏனெனில் அது எனது தோற்றத்தை நவநாகரீகமாக மாற்றியது. அப்போது தான் நான் ‘திருமதி இந்தியா’ அலங்கார அணிவகுப்பு (Mrs India Pageant) முகநூல் பக்கத்தை பார்த்தேன், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தேன்.
"நான் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், தைரியத்துக்காகவும் பாராட்டப்பட்டேன். துபாய் மற்றும் மும்பையில் எங்களுக்கு வெவ்வேறு சுற்றுகள் இருந்தன. இறுதிச்சுற்று டெல்லியில் இருந்தது."
நிகழ்ச்சியின் நீதிபதிள் என்னை பாராட்டினார்கள், வழுக்கை தலையுடன் இருப்பது பாரீஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் ஒரு பேஷன் என்றும், முடி இருக்கும் மற்ற பங்கேற்பாளர்களை போன்ற அதே வாய்ப்பையும் நான் கொண்டிருக்கிறேன் என்றும் காட்டியது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திருமதி இந்தியா உலகளாவிய (திருமதி இந்தியா உலகளாவிய) இறுதிப் போட்டிகளில் அலோபீசி நோய்வாய்பட்டிருந்த முதல் போட்டியாளர், மற்றும் திருமதி உத்வேகம் (Mrs. Inspirational) என்ற பட்டத்தை வென்றார்,
“திருமதி இன்ஸ்பிரேஷன் பட்டத்தை வெல்வதற்கு நான் தான் மிகச் சரியானவள் என்று நினைத்தேன். என் தலைமேல் அந்த கிரீடம் வைத்து போட்டித்தொடரின் வெற்றியாளர் என்று கூறும்போது, நான் என் தைரியத்திற்காக மிகவும் பெருமைப் பட்டேன் மற்றும் என் உள்ளார்ந்த அழகு மற்றும் தைரியத்தை ஏற்றுக்கொண்டேன்.”
என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து என்ன சொல்ல முடியும் என்றால், நீங்கள் அழகின் சமூகக் கட்டுப்பாடுக்குள் பொருந்துகிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல, ஏனென்றால் முடிவில் முக்கியமானது நீங்கள் உங்கள் மீதும், உங்கள் உள் அழகின் மீதும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா இல்லையா என்பது தான்?
“நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களானால், சமூகம் உங்களை நேசிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டீர்கள், அதன்மூலம் நீங்கள் உலகை வெல்வீர்கள்," என்கிறார் கேட்கி.
விருதுகள் மற்றும் சாதனைகள்
நாட்டின் முதல் அலோபீசியா நோயிலிருந்து உயிர் பிழைத்தவர் மற்றும் மாடலான கேட்கி ஜானி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு அழகுப் போட்டிகளில் பல பட்டங்களை வென்றுள்ளார். அவர் பல நிறுவனங்களால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பாரத் பிரேர்னா விருது, மகளிர் சாதனைகள் விருது, 2019 ஆம் ஆண்டின் உத்வேகம் தரும் பெண், மாடலிங் துறையில் அவரது அற்புதமான ஒத்துழைப்புக்காக ‘Inspiring Womanhood - The V Award 2019’ விருது, 2019 டிசம்பரில் ‘மனிதநேய முதல் அறக்கட்டளை’ கேட்கியை கௌரவித்தது.
கேட்கி ஜானியின் முகநூல் பக்கத்தை அவரே இயக்குகிறார். அவை மற்ற பெண்கள் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் விழிப்புடன் செயலாற்ற ஊக்கம் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனுடன் ஒரு தன்னார்வக் தொண்டு நிறுவனத்தையும் தொடங்க கேட்கி திட்டமிட்டுள்ளார்.
கேட்கியின் வாழ்க்கையைப் பற்றி ‘அக்னிஜா’ என்ற புத்தகத்தையும் பிரபுல்லா ஷா எழுதியுள்ளார். தற்போது, இந்த புத்தகம் குஜராத்தி மொழியில் மட்டுமே உள்ளது, ஆனால் விரைவில் இது இந்தி, ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.