Budget 2023: 'சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.9000 கோடி ஒதுக்கீடு; கடன் வட்டி 1% குறைப்பு’ - நிர்மலா சீதாராமன்!
சிறு, குறு, நடுத்தர தொழில் (Msme) பிரிவினரை மேம்படுத்துவதற்காக ரூ. 9000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவினரை மேம்படுத்துவதற்காக ரூ.9000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2023 - 2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டும் காகிதமில்லாத பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு
9,000 கோடி ரூபாய் செலவில் MSME-களுக்கான புதுப்பிக்கப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டம் ஏப்ரல் 1 முதல் தொடங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
“திறமையான கடன் ஓட்டத்தை எளிதாக்குவதற்கும் நிதி ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கும் தேசிய நிதி தகவல் பதிவேட்டை அரசாங்கம் அமைக்க உள்ளது. நிதித்துறை கட்டுப்பாட்டாளர்கள் தற்போதுள்ள ஒழுங்குமுறைகளை ஒரு விரிவான மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்,” என்றார்.
- கோரப்படாத பங்குகள் மற்றும் ஈவுத்தொகைகளை மீட்டெடுப்பதற்காக ஒரு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப போர்டல் தொடங்கப்படும்.
- ’ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
- உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு; 23 சதவீதத்திலிருந்து 13% வரை வரி குறைப்பு செய்யப்படுகிறது.
- ரோபோடிக் ட்ரோன் கேமிராக்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு வழங்கப்படும். தற்போது உள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் இந்த புதிய அமைப்புகளும் சேர்க்கப்படும்.
- நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் படிவங்களை தாக்கல் செய்யும் நிறுவனங்களுக்கு விரைவான பதிலளிப்பதற்காக ஒரு மத்திய செயலாக்க மையம் அமைக்கப்படும்.
- ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்.
MSME-க்களுக்கு தனி டிஜி லாக்கர்:
சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்காக பிரத்யேக டிஜிலாக்கர் (Digilocker) அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல்வேறு அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் தேவைப்படும் போதெல்லாம் ஆவணங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக சேமித்து பகிர்ந்து கொள்ள இது அனுமதிக்கும் என்று சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதார், பிரதமர் ஜன்தன் யோஜ்னா, வீடியோ கேஒய்சி, இந்தியா ஸ்டேக் மற்றும் யுபிஐ உள்ளிட்ட இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் இந்தியாவில் ஃபின்டெக் சேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
டிஜி லாக்கர், டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்களின் கீழ் இதுவரை 14.6 கோடி நபர்கள் ஆதார் அட்டை, பாலிசி ஆவணங்கள், பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட 5.6 பில்லியன் ஆவணங்களை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.
Budget 2023: மாதச் சம்பளம் பெறுவோருக்கு நல்ல செய்தி - ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை!