Budget 2023 அறிவிப்பால் விலை உயரும்; விலை குறையும் பொருட்கள் எவை?
மத்திய பட்ஜெட்டில் பொருட்களின் வரியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் தங்கம், சிகரெட் உள்ளிட்டவற்றின் விலை ஏறப் போகிறது. வேறு என்னென்ன பொருட்கள் விலையில் மாற்றம் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
2023 - 2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் காகிதமில்லாத பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
மத்திய பொது பட்ஜெட் 2023ல் பொருட்களுக்கு மறைமுகமாக விதிக்கப்படும் வரி விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் இறக்குமதிஇதன்படி எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பட்ஜெட் எதிரொலி - விலை ஏறும், குறையும் பொருட்கள்
விலை ஏறப்போகும் பொருட்கள்
- 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிகரெட் விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. சிகரெட் மீதான வரி 16% உயர்த்தப்பட்டுள்ளதால், சிகரெட் விலை உயரும். 65mm முதல் 75 mm வரை நீளத்திற்கு ஏற்ப ஆயிரம் சிகரெட்டுகளின் விலை ரூ.30 முதல் ரூ. 115 வரை அதிகரிக்கும். இந்த விலையேற்றமானது பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வருகிறது.
- தங்கக்கட்டிகளில் இருந்து செய்யப்படும் ஆபரணங்களுக்கான இறக்குமதி சுங்க வரி உயர்த்தப்படுகிறது. இதனால் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். தங்கத்தின் சுங்கவரி 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- விலைமதிப்புமிக்க உலோகங்களான வெள்ளி, பிளாட்டினத்திறக்ன இறக்குமதிக்கான சுங்கவரி உயர்த்தப்படும் என்ற அறிவிப்பால் இவற்றின் விலைகளும் உயரும். வெள்ளி எந்த வடிவத்திலானதாக இருந்தாலும் அதன் வரியானது 7.5 சதவீதத்திலிருந்து to 15% உயர்த்தப்பட்டுள்ளது.
- இமிடேஷன் நகைகளுக்கான உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விலைகளும் உயரும்.
- அடுக்குமாடி குடியிருப்புகளில் கிச்சனில் புகைபோக்குவதற்காக பயன்படுத்தும் எலக்ட்ரிக் சிம்னிக்கான சுங்க வரியானது 7.5 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்னி விலை உயரும்.
- ரப்பர் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 15.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளதால் ரப்பரை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் டயர் உள்ளிட்டவற்றின் விலை உயரும்.
- சிந்தெடிக் ரெசின், ஃபைபர், டை, பெயின்ட்டுகளை கரைப்பதற்கான solventகளாக பயன்படுத்தப்படும் naaptha கெமிக்கல் மீதான வரி 2.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இவை சார்ந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை உயரக் கூடும்.
- இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சைக்கிள்களின் விலை உயரக்கூடும்.
விலை குறையும் பொருட்கள்
- உள்நாட்டில் மொபைல் உற்பத்தி அதிகரித்திருப்பதால் அதனை ஊக்கப்படுத்தும் விதமாக மொபைல் உதிரி பாகங்களான கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றிற்கு இறக்குமதி வரி குறைப்பு, அதனால் மொபைல் போல் விலையும் குறையலாம்.
- தொலைக்காட்சி பேனல்களுக்கான சுங்க வரி 2.5 சதவிகிதமாக குறைகிறது. இதனால் டிவி விலையும் குறைய வாய்ப்பு.
- இறால் ஏற்றுமிதியை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிப்பு. இதனால் இறால் உணவுப் பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்குக் கிடைக்கும்.
- எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தும் லித்தியம், அயன் மூலப்பொருட்களுக்கு வரி இல்லை. மின்சார வாகனங்களில் விலை குறையலாம்.
- ஆய்வகத்தில் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால், வைரத்தில் விலையில் மாற்றம் இருக்கலாம்.
- சைக்கிள் மற்றும் இறக்குமதி பொம்மைகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை குறையும்.
- காப்பர் ஸ்கிராப் மீது 2.5 சதவிகித சலுகை அடிப்படை சுங்க வரி தொடரும் என்று அறிவித்துள்ளதால், இதன் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.