தொழில் தொடங்க ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன்: SBI-யின் அசத்தல் லோன் திட்டம்!
பெண்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ-யின் சூப்பர் ஆஃபர் திட்டங்கள்.
நாட்டின் முக்கியமான மற்றும் மிகப்பெரிய பொத்ததுறை வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புத்திட்டங்களை அவ்வபோது அறிமுகப்படுத்திவருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும், கடனுதவி வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
வீட்டில் நகை இருந்தால் அதை வைத்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில் தொடங்க காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. தொழில் தொடங்க மூலதனம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவும் விதமாக இந்த அறிவிப்பானது வெளியிடபட்டுள்ளது. இந்தக் கடன் திட்டமானது சிறு குறு நிறுவனங்களை மையப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடன் பெற்று தங்களது தொழிலை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதத்தில் சில நிபந்தனைகளும் உள்ளன.
கடன் வாங்கும் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட், கடன் மதிப்பீடு போன்ற விவரங்களைச் சரிபார்த்து அதற்கு ஏற்ற விகிதத்திலேயே கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் குழப்பங்கள், சந்தேகங்கள் இருந்தால், இத்திட்டம் குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று இத்திட்டத்தில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.
இது தவிர, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் வாடிக்கையாளர்களுக்கு சலுகைத் திட்டம் ஒன்றை பாரதஸ்டேட் வங்கி அறிவித்திருந்தது. இதன்படி,
ஸ்டேட் வங்கியில் பெண் வாடிக்கையாளர்கள் பெறும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் கூடுதலாக 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாரத ஸ்டேட்வங்கியில் பெண் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டுக் கடன்களை 6.70 சதவீத வட்டியில் தற்போது பெறலாம். மேலும், செயல்பாட்டுக் கட்டணமும் கிடையாது. எனவே, இந்தவாய்ப்பை பெண் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.