சென்னை ஸ்டார்ட் அப் ‘Agnikul' ரூ.23.4 கோடி நிதி திரட்டியது!
விண்வெளி தொழிநுட்ப ஸ்டார்ட் அப்பான அக்னிகுல், பை வென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.23.4 கோடி நிதி திரட்டியுள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான, 'அக்னிகுல்' (AgniKul) ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக ரூ.23.4 கோடி நிதி பெற்றுள்ளது. பை வென்சர்ஸ் தலமையிலான இந்த சுற்றில், ஹரி குமார் (லயன்ராக் கேபிடல்), அர்தா வென்சர்ஸ், லெட்ஸ் வென்சர்ஸ், குலோப் இன்வெஸ்டர், சி.ஐ.ஐ.இ உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
சென்னை ஐஐடியில் உள்ள நேஷனல் செண்டர் பார் கம்புஷன் ரிசர்ச் மையத்தில் செயல்பட்டு வரும் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான, அக்னிகுல், 100 கிலோவுக்கு குறைவான செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட்டை உருவாக்கி வருகிறது.
நிறுவனம் உருவாக்கி வரும் ராக்கெட், 30 முதல் 100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தக்கூடியது. இதன் இஞ்சின், 3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இஞ்சின் வடிவமைப்பை எளிதாக்கி, சில வாரங்களில் செயற்கைக்கோள் செலுத்துவதை சாத்தியமாக்க முடியும் என நிறுவனம் குறிப்பிடுகிறது.
உலகில், ஒரே பொருளில் 3டி பிரிண்டிங் மூலம், ராக்கெட் இஞ்சினை உருவாக்கக் கூடிய ஒரே நிறுவனமாக அக்னிகுல் இருப்பதாக நிறுவனம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நிறுவனம் தற்போது, ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக ரூ.23.4 கோடி நிதி பெற்றுள்ளது. Pi வென்சர்ஸ் தலமையிலான இந்த சுற்றில், ஹரி குமார் (லயன்ராக் கேபிடல்), அர்தா வென்சர்ஸ், லெட்ஸ் வென்சர்ஸ், குலோப் இன்வெஸ்டர், சி.ஐ.ஐ.இ உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஏற்கனவே உள்ள முதலீட்டாளரான ஸ்பெஷலே இன்வெஸ்டரும் இதில் பங்கேற்றுள்ளது. இந்த நிதியை கள சோதனை, பேப்ரிஜ்கேஷன் மற்றும் குழு விரிவாக்கத்திற்கு பயன்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விண்வெளி ஆய்வை அனைவருக்கும் சாத்தியமாக்கும் நோக்கத்துடன் அக்னிகுல் நிறுவனத்தைத் துவக்கினோம். சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உதவும் மாடுலர் ராக்கெட்கள் மூலம் இதை நிறைவேற்ற உள்ளோம். பை வென்சர்ஸ், ஸ்பெஷலே இன்வெஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் மூன்றாவது சுற்று நிதி எங்கள் பயணத்திற்கு ஊக்கமளிக்கும்,” என்று நிறுவன இணை நிறுவனர், சி.இ.ஓ ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
டிஜிட்டல் துறையில் மட்டும் அல்லாமல் மற்ற துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிறுவனங்களை உருவாக்கும் திறன் இந்தியர்களுக்கு உண்டு. சரியாக செயல்பட்டால் இந்தியா சர்வதேச அளவில் புதுமையாக்கத்தில் முன் நிற்கும். இந்தியாவில் இருந்து வரும் உலகத் தரத்திலான புதுமையாக்கத்திற்கான உதாரணமாக அக்னிலுக் விளங்குகிறது, என பை வென்சர்ஸ் பார்ட்னர் மனிஷ் சிங்கால் கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்