Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

கொரோனா கட்டுப்பாட்டுகளை மதிக்காத 50 மாவட்டங்கள்: கடுமையாக எச்சரித்த மத்திய அரசு!

மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாட்டுகளை மதிக்காத 50 மாவட்டங்கள்: கடுமையாக எச்சரித்த மத்திய அரசு!

Tuesday April 13, 2021 , 2 min Read

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களான மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் உள்ள 50 மாவட்டங்களில் கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் மதிப்பதில்லை. இதனால் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துளளது.


கடந்த வாரம் மாநிலங்களுக்குச் சென்ற மத்திய குழுக்கள், மாநில நிர்வாகங்களால், குறிப்பாக கட்டுப்பாட்டு மண்டலங்களில், கண்காணிப்பு நடவடிக்கைகளின் பற்றாக்குறை இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து, இந்த எச்சரிக்கை வந்தது.


மாவட்டங்களில் நடத்திய சோதனையில், ஆர்டி-பி.சி.ஆர்-ஐ பயன்படுத்தி போதுமான சோதனைகள் செய்யாதது, கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைக்கு போதுமான மனித சக்தி இல்லாதது, ஆகியவை மத்திய அணிகள் மேற்கொண்ட கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது.

corona

மேலும், மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்ட குழுக்கள், குறிப்பாக சதாரா, சாங்லி மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக மத்திய குழு பாராட்டி இருக்கின்றன. இதேபோல், சதாரா, பண்டாரா, பால்கர், அமராவதி, ஜல்னா போன்ற சில மாவட்டங்களில் சோதனை திறன் அதிகமாக உள்ளது என்றுள்ளது.


மத்திய குழுவிடம் இருந்து பெறப்பட்ட பின்னூட்டத்தின் அடிப்படையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இது தொடர்பாக சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனை விகிதம் குறித்து பல மாவட்டங்களில் குறைந்து காணப்படுகிறது. இதில் முன்னேற்றம் தேவை. கோவிட் -19 ஐக் கண்டறிய 70% சோதனைகள் ஆர்டி-பி.சி.ஆர் மூலம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் விரைவான ஆன்டிஜென் சோதனை என்பது கட்டுப்பாட்டு மண்டலங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை மாற்ற இதைப் பயன்படுத்த முடியாது," என்றார்.

மத்திய குழுவின் கண்டுபிடிப்புகள் மேலும் சில வெளிப்பாடுகளுக்கு வழிவகுத்தன. சில மாவட்டங்களில் வெளியில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து ஏராளமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அவற்றுக்கு கட்டுப்பாட்டு பகுதிகளை விரிவுபடுத்தும்படி அல்லது போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று புதிய மண்டலங்களுக்கு அறிவிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

dharavi

இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, ராய்ப்பூர் மற்றும் ஜஷ்பூரைச் சேர்ந்த குழு சத்தீஸ்கரில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் சுற்றளவு கட்டுப்பாட்டின் குறைபாட்டை மத்திய குழுக் கண்டறிந்தது, இந்த மண்டலங்களுக்குள் மக்கள் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.


மற்றொரு பிரச்சினை கோர்பா, துர்க் மற்றும் பலோட் மாவட்டங்களில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை வசதிகளின் பற்றாக்குறை மற்றும் மேம்பட்ட தொடர்பு தடமறிதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.