கொரோனா வைரஸ் தாக்குதலால் முக்கிய விளையாட்டுப் போட்டிகள் ரத்து...
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலையை உண்டாக்கியுள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலையை உண்டாக்கியிருப்பதால், ஸ்டேடியம் வருவாயை பாதிக்கும் என ரேட்டிங் நிறுவனமான பிட்ச் தெரிவித்துள்ளது.
கொரோனா வரைஸ் தாக்கம் காரணமாக, சர்வதேச மொபைல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
“ஃபார்முலா 1 கிராண்ட்பிரி, ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் உள்ளிட்ட சீனாவில் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும் விளையாட்டு மைதானங்களுக்கு மக்கள் வருவதை குறைத்துள்ளது. மேலும், ஆசிய பசுபிக் பகுதியில் நடைபெற உள்ள பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும், வைரஸ் அச்சம் அல்லது பயணக் கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக விளையாட்டு மைதானங்களின் டிக்கெட் வருவாய் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் வருவாய், ஸ்டேடியங்களுக்கு வழங்கப்படும் ரேட்டிங் மீது தாக்கம் செலுத்துகிறது. பொதுவாக அதிக ரேட்டிங் பெற டிக்கெட் வருவாய் கணிசமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக இங்க்லிஷ் பிர்மியர் லீக் போட்டிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சராசரி பார்வையாளர்கள் வருகை 96 சதவீதமாக இருக்கிறது. விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்படும் போது வருவாய் பாதிக்கப்படுகிறது.
“ஆசிய பசுபிக் பகுதியில் உள்ள ஸ்டேடியம்கள், குறிப்பாக சீனாவில் உள்ளவை, பாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை துவங்கியுள்ளது. அமெரிக்காவில் அதிக பாதிப்பு இல்லை,” என பிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“வைரஸ் பாதிப்பு தொடர்ந்து நீடித்தால், டோக்கியோ ஒலிம்பிக் போன்ற முக்கியப் போட்டிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு, வருவாய் மோசமாகலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி: ஏ.என்.ஐ | தமிழில்: சைபர்சிம்மன்