கோவிட்-19 இறப்பைக் குறைக்கும் Dexamethasone மருந்தை பயன்படுத்த அனுமதி!
மிதமானது முதல் தீவிரப் பாதிப்புகளுக்கு Methylprednisoloneக்குப் பதிலாக Dexamethasone மாற்று மருந்தாகப் பயன்படுத்த மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோவிட்-19 குறித்து அறிந்து கொள்ளும் ஞானத்தை வேகத்தைப் பராமரிக்கும் வகையில், கோவிட்-19 நோய்க்கு சிறந்த மருந்துகளுடன் சிகிச்சை அளிப்பது தொடர்பான மருத்துவ மேலாண்மை விதிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மேம்படுத்தியுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட விதிமுறைகளில், மிதமானது முதல் தீவிர கொரோனா பாதிப்புக்கு Methylprednisoloneக்குப் பதிலாக Dexamethasone மாற்று மருந்தாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியிருப்பதும் அடங்கும். அண்மையில் கிடைத்த ஆதாரம் மற்றும் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெக்சாமிதாசோன், எதிர்ப்பு அழற்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தடுப்பு விளைவுகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கார்ட்டிகோஸ்டீராய்டு வகையைச் சேர்ந்த மருந்தாகும்.
இந்த மருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் குணமடைவதற்காக சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. கவலைக்கிடமான வகையில் நோயுற்றவர்களை இறப்பிலிருந்து காபாற்றி நல்ல பலனை இது அளித்துள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி நோயாளிகள், பிராணவாயு சிகிச்சை பெற்ற நோயாளிகளில் ஐந்தில் ஒரு பகுதியினரில் இறப்பு விகிதம் இதன் மூலம் குறைந்துள்ளது. இந்த மருந்து தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதுடன், அநேக இடங்களில் இது கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் அதன்படி, பயன்படுத்தப்படக்கூடிய மருந்தான டெக்சாமிதாசோன் பற்றிய தகவல்களை மத்திய சுகாதாரத்துறைச் செயலர் பிரீத்தி சுதன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளார்.
மருந்துகள் கிடைக்கச் செய்வதற்கும், விதிமுறைகளின் படி, மருத்துவ சிகிச்சை மேலாண்மையை மேற்கொள்ளவும் இது உதவும். இதுபற்றிய, வழிகாட்டுதல் ஆவணத்தை சுகாதார அமைச்சகத்தின் https://www.mohfw.gov.in/pdf/ClinicalManagementProtocolforCOVID19dated27062020.pdf , என்ற வலைதளத்தில் இருந்து ஆன்லைன் மூலம் பெறலாம்.
சிகிச்சை மேலாண்மை விதிமுறைகள் கடந்த ஜூன் 13-ஆம்தேதி கடைசியாக மேம்படுத்தப்பட்டன.
தகவல் உதவி: பிஐபி