‘கொரோனாவை தடுக்க லாக்ட்வுன் செய்வது நாட்டை அழித்துவிடும்’ - டிரம்ப்
அமெரிக்கா முழுவதும் சமூக விலகல் வலியுறுத்தப்படும் நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு முன் லாக்டவுனை தளர்த்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்பான லாக்டவுனை ஏப்ரல் மாத நடுவே தளர்த்த விரும்புவதாகவும், லாக்டவுன் தொடர்வது நாட்டை அழித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
"பலர் நான் சொல்வதுடன் ஒத்துப்போகின்றனர். நம்முடைய நாடு லாக்டவுனுக்காக உருவாக்கப்பட்டதல்ல. முடக்குவதன் மூலம் ஒரு நாட்டை நீங்கள் அழித்துவிடலாம்,” என்று அதிபர் டிரம்ப் பாக்ஸ் நியூஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
"ஈஸ்டருக்கு முன் நாட்டை திறந்து ஊக்கப்படுத்த விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் ஏப்ரல் 12 ம் தேதி வருகிறது.
அமெரிக்காவில் சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் தீவிரப்படுத்தப்பட்டு, உலகின் பெரிய பொருளாதாரம் முடங்கியுள்ளது. எளிதாக பரவும் இந்த கிருமியை கட்டுப்படுத்த ஒரே வழி, இது கட்டுப்பாடில்லாமல் பரவுவதை தடுப்பது தான் என்று கூறியுள்ளனர்.
பாக்ஸ் நியூசுக்கு, வெள்ளை மாளிகையில் இருந்து அளித்த பேட்டியில், ஒட்டுமொத்த முடக்கம், மிகை நடவடிக்கை என கருதுவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
"ஆண்டுதோறும் ஃப்ளு காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கானோரை இழக்கிறோம். ஆனால் அதற்காக நாட்டை முடக்குவதில்லையே?” என டிரம்ப் வாதிட்டுள்ளார்.
"வாகன விபத்துகளில் இன்னும் அதிகமானவர்களை இழக்கிறோம். அதற்காக ஆட்டோமொபைல் நிறுவனங்களை அழைத்து, கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள், இனியும் கார்கள் எங்களுக்கு வேண்டாம் என கூறுவதில்லையே?” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தல் பிரச்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் மீண்டும் களத்தில் இறங்க ஆர்வமுடன் இருக்கிறார். கொரோனா பாதிப்பிற்கு முன், குறைந்த வேலையின்மை மற்றும் வலுவான பொருளாதாரத்தை அவர் சாதகமான அம்சங்களாக கருதினார்.
"நம்மால் போயிங்கை இழக்க முடியாது. இந்த நிறுவனங்களை இழக்க முடியாது. நிறுவனங்களை இழந்தால், நாம் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வேலையிழப்புகளை பற்றி பேசுகிறோம்,” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்,.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரசை எதிர்கொள்ள சமூக விலகலே ஒரே வழி என்று 21 நாள் லாக்டவுனை கொண்டு வந்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்: பிடிஐ