சளிக்காய்ச்சல், நோய் பரவலைத் தடுக்க பல்முனை பூச்சை உருவாக்கியுள்ள இந்திய ஆராய்ச்சி மையம்!
கோவிட்-19, சளிக்காய்ச்சல் நோய்கள் பரவலைத் தடுக்க பல்முனை பூச்சை ஜவஹர்லால் நேரு அறிவியல் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான பெங்களூர் ஜவஹர்லால் நேரு அறிவியல் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம், நுண்ணுயிர்க்கொல்லி பூச்சு ஒன்றை உருவாக்கியுள்ளது.
கடுமையான மூச்சுத்திணறல் தொற்றுக்கு மூலக் காரணமான, கொடிய உயிர்க்கொல்லி நோயான இன்ப்ளுயன்சா எனப்படும் தொற்று பரவுவதைத் தடுப்பதில், இது மிகச்சிறந்த முறையில் செயலாற்றி, இந்தத் தொற்றின் பெருமளவை செயலிழக்கச் செய்துள்ளது.
கோவிட்-19க்கு எதிரான நாட்டின் போருக்கு துணை புரியும் வகையில், இந்தப்பூச்சை மேலும் கூடுதலாக உருவாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவான அறிவியல் மற்றும் பொறியில் ஆராய்ச்சி வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இன்புளுயன்சா வைரசை (மறைந்திருக்கும் வைரஸ்) 100 சதவீதம் இந்தப் பூச்சு அழிக்கும் திறம் வாய்ந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தொடர்பு வரை மறைந்திருக்கும் தொற்றான கோவிட்-19-ஐயும் இந்தப்பூச்சு அழிக்கக்கூடியது என்பது தெளிவாகியுள்ளது.
இதற்கான தொழில்நுட்பம் மிக எளிதானது என்பதால், இதை உருவாக்குவதற்குத் திறமையான பணியாளர்கள் தேவை இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி, இது கோவிட்-19 தொற்றுக்கு எதிராக சோதிக்கப்பட உள்ளது. இதன் தீவிரமான தடுப்பு செயல்பாடு உறுதி செய்யப்பட்டால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பாதுகாப்புக்காக பயன்படுத்தும் முகக்கவசங்கள், அங்கிகள், கையுறைகள் போன்ற உபகரணங்களில் இதைப் பூசுவதன் மூலம், அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.
இது, கோவிட்-19க்கு எதிராக மேலும் கூடுதல் தீவிரத்துடன் அவர்கள் செயல்பட உதவும் (மேலும் கூடுதல் விவரங்களுக்கு டாக்டர் ஜெயந்தா ஹால்டரை, [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 9449019745 என்ற கைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்.)