Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்? பிரதமர் மோடி விளக்கம்!

உலகம் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. நம் விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்? பிரதமர் மோடி விளக்கம்!

Friday December 04, 2020 , 2 min Read

உலகம் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. நம் விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.


கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்தும், நிலவரம் குறித்தும் அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர்,

“இந்தியாவில் 3 தடுப்பூசிகள் சோதனை கட்டத்தில் உள்ளது. தடுப்பூசி தயாரானதும், முதலில் மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், தீவிர பாதிப்புக்குள்ளான முதியவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார்.

இன்னும் சில வாரங்களில் தடுப்பூசி சந்தைக்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பயன்படுத்தும் என்றும், அது குறைந்த விலையில் செயலூக்கம் உடைய தடுப்பூசியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.


இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி குறித்து பேசியவர்,

“தடுப்பூசியைப் பெற நாம் நீண்டகாலம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் நம்புகிறார்கள். இதிலிருந்து அடுத்த சிலவாரங்களில் தடுப்பூசி தயாராகும் என்பது தெரிகிறது. அரசாங்கம் விஞ்ஞானிகளிடம் முடிவுக்காக காத்திருக்கிறது. அதிக விலை கொண்ட Pfiser தடுப்பூசிக்கு ஏற்கனவே இங்கிலாந்திலிருந்து அவசர அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் அந்த தடுப்பூசி அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது."

இந்நிலையில் பிரதமர் மோடி இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி குறித்து, "கோவிட் -19 க்கு எதிரான மலிவான ஆனால் பயனுள்ள தடுப்பூசியை உலகம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகம் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. நம் விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

"எட்டு கோவிட் தடுப்பூசிகள் இந்தியாவில் ஆயத்தத்தின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. சோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் மூன்று இந்திய தடுப்பூசிகள் இதில் அடங்கும். தடுப்பூசி விநியோகத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன,” என்றார்.

பிரதமர், முதன்முறையாக, தடுப்பூசி நிர்வாகத்தின் கொள்கை குறித்தும் பேசியுள்ளார். "சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தடுப்பூசி போடுவதில் எங்களுக்கு ஒரு பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நெட்வொர்க் உள்ளது. நாங்கள் அதை முழுமையாகப் பயன்படுத்துவோம்,” என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.