ஓமந்தூரார், கேஎம்சி மருத்துவமனைகளில் தற்காலிக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க CREDAI உதவி!
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான அமைப்பான கிரெடாய் சென்னை அரசு மருத்துவமனகளில் தற்காலிக ஆக்சிஜன் படுக்கைகளை அமைத்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொள்ள உதவும் வகையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான அமைப்பான CREDAI சென்னை அரசு மருத்துவமனகளில் தற்காலிக ஆக்சிஜன் படுக்கைகளை அமைத்துள்ளது.
கிரெடாய் (CREDAI) அமைப்பின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 50 தற்காலிக ஆகிசிஜன் படுக்கைகள் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பட்டுள்ளன. இந்த படுக்கைகள் ஜெர்மனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.
“கீழ்பாக்கம் மருத்துவமனையில் படுக்கைகள் எண்ணிக்கையை இரண்டு நாட்களில் 250 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். ஓமந்தூராரில் 100 படுக்கைகளும், அண்ணா நகரில் மேலும் 200 படுக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன,” என்று கிரெடாய் தமிழக பிரிவின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா தி இந்து நாளிதழிடம் கூறியுள்ளார்.
இந்த தற்காலிக படுக்கைகள், அரசு மருத்துவமனை டாக்டர்களால் பராமரிக்கப்படும். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வரும் போது, நோயாளிகள் உடனடியாக இந்த படுக்கைக்கு மாற்றப்படுவார்கள். இதன் பயனாக ஆம்புலன்ஸ் வாகனம் அடுத்த நோயாளியை அழைத்து வர செல்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
தற்போது, நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்க காத்திருப்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனையில் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
சென்னையில் ஆகிசிஜன் படுக்கைகளை அதிகரிப்பதற்காக துறையின் மற்ற பிரதிநிதிகளுடனும் இந்த அமைப்பு பேசி வருவதாகத் தெரிகிறது. அடுத்த 10 நாட்களில் துறை பிரதிநிதிகளால் 10,000 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளன.
பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொள்ள உதவி வருகின்றன. தனிநபர்களும் தகவல் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் உதவி வருகின்றனர்.
தகவல் உதவி: தி இந்து | தொகுப்பு: சைபர் சிம்மன்