சன் குழும உரிமையாளர் கலாநிதி மாறனுக்கு ஸ்பைஸ் ஜெட் ரூ.380 கோடி வழங்க தில்லி கோர்ட் உத்தரவு!
ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் அதன் முன்னாள் புரோமோட்டர்களான சன் குழுமத்தின் கலாநிதி மாறனுக்கு ரூ.380 கோடி வழங்க மற்றும் நான்கு வாரங்களுக்குள் சொத்துக்கள் தொடர்பான மனுவை தாக்கல் செய்யவும் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை வெளியிட்டுள்ள மிண்ட் நாளிதழ் நீதிமன்ற ஆணை நகலைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறைந்த கட்டண சேவை வழங்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. விமான குத்தகை நிறுவனங்களுடனான பிரச்சனைகளுக்கு மத்தியில் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் ரூ.106.8 கோடி வருவாயை அறிவித்தது. இது நான்கு மடங்கு வளர்ச்சியாகும்.
மாறன் குடும்பம் மற்றும் விமான நிறுவனத்தின் தற்போதைய புரோமாட்டர்கள் அஜய் சிங் கிடையே ஒப்பந்த நிறைவேற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
2017ம் ஆண்டு, தனக்கும் தனது கேஏஎல் விமான நிறுவனத்திற்கு மாற்றக்கூடிய வாரண்ட்கள் மற்றும் முன்னுரிமை பங்குகள் அளிக்கத் தவறியது தொடர்பாக உண்டான நஷ்டத்திற்காக வழக்கு தொடர்ந்தார்.
நீண்ட நீதிமன்ற மோதலுக்கு பிறகு ஸ்பைஸ்ஜெட், ரூ.579.08 கோடி வழங்கியது. எனினும், வட்டி தொகை நிலுவையில் இருந்து, 242 கோடியில் இருந்து 380 கோடியாகி உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மாறனுடன் பேசி வருவதாக ஸ்பைஸ் ஜெட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
சன் குழும கருத்தை அறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் ரூ.26.85 எனும் விலையில் பரிவர்த்தனை ஆயின. இது 3.95 சதவீதம் ஏறுமுகம் ஆகும்.
தகவல் உதவி: மிண்ட்
‘தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை’ - மாறன் இடமிருந்து அஜய் சிங்குக்கு ஸ்பைஸ்ஜெட் போனது எப்படி?
Edited by Induja Raghunathan