இன்று முதல் இந்தியாவில் 'டிஜிட்டல் கரன்சி' - ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவிற்கான டிஜிட்டல் கரன்சி சோதனை முறையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கான டிஜிட்டல் கரன்சி சோதனை முறையில் இன்று அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி அறிமுகம்
கடந்த பிப்ரவரி மாதம் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உலகம் முழுவதும் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் தங்களுக்கென சொந்த டிஜிட்டல் கரன்சியை (Central Bank Digital Currency - CBDC) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் அடுத்தாண்டு தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில்,
“டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படும்,” என தனது மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பை அடுத்து, டிஜிட்டல் கரன்சி அல்லது டிஜிட்டல் ருபி, 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்,
சோதனை முறையாக இன்று டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
இந்தியாவிற்கான டிஜிட்டல் கரன்சி இன்று சோதனை முறையில் வெளியிடப்படும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அக்டோபர் 7, 2022 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் பிரஸ் ரிலீஸ், குறிப்பிட்ட பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயின் (இ) பைலட் வெளியீட்டை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் ரூபாய் - மொத்த விற்பனை பிரிவில் (எக்ஸ்-டபிள்யூ) முதல் பைலட் நவம்பர் 1, 2022 அன்று தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் கரன்சியை அரசு பத்திரங்கள், பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் கரன்சியை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி என 9 வங்கிகள் மூலமாக பரிவர்த்தனைகளை தொடங்கவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சியை முதலில் சில்லறை விற்பனைப் பிரிவில் (e-R) வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய குழுக்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தொடங்கவும், ஒரு மாதத்திற்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சி என்பது, ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்படும் டிஜிட்டல் வடிவிலான கரன்சி ஆகும். இவை ஏற்கனவே உள்ள கரன்சிகள் போலவே செயல்படும். ஆனால், இவை பிட்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோ காயின்களை போல அல்லாமல் ஒரு நாட்டின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு, நிதிக் கோட்ப்பாடுகளின்படி செயல்படும் கரன்சிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Explainer - டிஜிட்டல் வங்கி யூனிட் என்றால் என்ன? பயனர்கள் எப்படி பெறலாம்?