‘10 ரூபாய்க்கு மேல் தரவேண்டாம்’ - 16 கோடி சேர்த்து பேபி மித்ராவின் உயிரைக் காக்க பிரச்சாரம்!
சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவை!
நாமக்கல் குமாரபாளையத்தைச் சேர்ந்த தம்பதி ஜவுளித் தொழிலதிபர் கே சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி வி பிரியதர்ஷினி. இவர்களின் ஒரு வயது பதினொரு மாதங்கள் நிரம்பிய மகள் மித்ரா முதுகுத் தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர். தாமதமாகத் தான் இந்தத் தகவல் இவர்களுக்கு தெரியவந்துள்ளது.
மரபணு குறைப்படுள்ள நோய் என்பதால், சிறுமி மித்ராவால் மூச்சு விடவும், உணவை விழுங்க முடியாமலும் போனது, அதோடு தானாக குனியவோ, நிமிரவோ முடியாது. அதேபோல் அதிக நேரம் நிற்கவும் முடியாது. இப்படி எந்த செயலையும் தானாக செய்ய முடியாத நிலையில், அவதிப்பட்டு வரும் மித்ராவை குணப்படுத்த மரபணு சிகிச்சை மருந்தான சோல்ஜென்ஸ்மா (zolgensma) என்கிற மருந்து தேவை.
உலகின் அரியவகை அதேநேரம் விலையுர்ந்த மருந்துகளில் ஒன்றான இந்த மருந்தின் விலை ரூ.16 கோடி ரூபாய். சுவிட்சர்லாந்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மருந்தினை இறக்குமதி செய்தே வரவழைக்க முடியும். இதற்கான இறக்குமதி வரி 6 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.22 கோடி தேவைப்படுகிறது.
இதற்குமுன் இதேபோல் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மத்திய அரசு இந்த இறக்குமதி வரியை தள்ளுபடி செய்துள்ளது. இந்தமுறையில் அதேபோல் தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரி 6 கோடியை தள்ளுபடி செய்யக்கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உட்பட பலர் வலியறுத்தியுள்ளனர்.
குழந்தை இரண்டு வயதாகும் முன்பு மருந்து செலுத்தினால் மட்டுமே குணமடைய வைக்க முடியும். இரண்டு வயதுக்கு மேல் இந்த மருந்தை செலுத்தினால் குணமடைவதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் மருந்துக்கான பணம் திரட்டப்பட்டு வருகிறது. பலர் தனிப்பட்ட முறையில் தங்கள் உதவிகளை செய்து வருகின்றனர். என்றாலும் ஜூலை 6ம் தேதிக்குள் இந்தத் தொகையை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தநிலையில், தனியார் தொண்டு நிறுவனமான கேர் & வெல்பேர் பவுண்டேசன் இந்த நிதியை திரட்டும் வகையில், 10 ரூபாய் சேலஞ் பிரச்சாரம் ஒன்றை நடத்தி வருகிறது. அதாவது,
ஒவ்வொரு நபரும் ரூ.10 அனுப்பினால் போதும். கூகுள் பே மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு மேல் இந்த ரூ.10 அனுப்பினாலே மருந்துக்கான பணத்தை ஏற்பாடு செய்து விட முடியும் என்பதால் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. நேற்று இரவு வரை ரூ. 7 கோடியே 85 லட்ச ரூபாய் சிறுமி மித்ரா சிகிச்சைக்காக நிதி சேர்ந்துள்ளது. இன்னும் 7 நாட்களில் ரூ.8 கோடியே 16 லட்சம் தேவைப்படுகிறது.
சிறுமி மித்ராவின் உயிரைக் காக்க ரூ.10 அளித்தால் போதும். உங்களால் முடிந்த உதவியை சிறுமியின் உயிர் காக்க பகிருங்கள்!
பேபி மித்ராவுக்கு உதவிட: cwfoundation- 7094033355/66
சிறுமி மித்ராவின் தந்தை சதீஷின் வங்கிக் கணக்கு விவரம்:
A/C No: 6999413500436165
A/C Name: K Satheesh Kumar-Ketto
A/C Type : Current
IFSC : YESB0CMSNOC