Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

20 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்ற எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ்!

4.5 பில்லியன் டாலர் பங்குகளை விற்ற மார்க்!

20 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்ற எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ்!

Friday December 03, 2021 , 2 min Read

உலகின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் உலகப் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களான டெஸ்லா மற்றும் அமேசான் பங்குகளை இந்த ஆண்டு விற்றுள்ளனர். அதுவும் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை இருவரும் விற்றுள்ளனர்.


தங்களுக்கு இடையே இருவரும் இந்த பங்குகளை விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக மஸ்க், நவம்பர் மாத இறுதியில் $1.05 பில்லியனை விற்ற பிறகு, டெஸ்லாவில் தற்போது $9.9 பில்லியன் மதிப்பிலான பங்குகளை ஆஃப்லோடு செய்துள்ளார்.

elon musk and jeff bezos

அதேநேரம், ஜெஃப் பெசோஸ் இ-காமர்ஸ் மற்றும் கிளவுட்-கம்ப்யூட்டிங் முன்னணியில் உள்ள $10 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். எனினும், இரண்டு மல்டி பில்லியனர்களின் வர்த்தகம், 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் உள் விற்பனையை $69 பில்லியனாக உயர்த்த உதவியதாக தரவுகள் சொல்கின்றன.


முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் தரவு நிறுவனமான வெரிட்டி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வெரிட்டியின் கூற்றுப்படி,

“கடந்த ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இரு நிறுவனங்களின் விற்பனை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும். மேலும், 10 ஆண்டு சராசரியை எடுக்கும் போது இது கிட்டத்தட்ட 80% அதிகமாகும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
mark

இவர்கள் மட்டுமல்ல, உலகின் மற்ற முன்னணி தொழிலதிபர்களும் தங்களின் பங்குகளை விற்றுள்ளனர். புகழ்பெற்ற வால்மார்ட் நிறுவனத்தை வழிநடத்தும் வால்டன் குடும்பம் இந்த ஆண்டு வால்மார்ட் பங்குகளில் $6.2 பில்லியன் அளவுக்கான பங்குகளை விற்றுள்ளது.


கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் $1.5 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.


ஃபேஸ்புக், இப்போது பெயர் மாற்றப்பட்டுள்ள மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் $4.5 பில்லியன் மெட்டா பங்குகளை விற்றுள்ளார். கொரோனா தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு பங்குகள் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தன. எனவே தான் இந்த பங்குகளை விற்று அதனை பணமாக்கி வருகிறார் என்று அந்த தரவு அறிக்கை தெரிவித்துள்ளது.


டெஸ்லா பங்கு இந்த ஆண்டு இதுவரை 55% உயர்ந்துள்ளது மற்றும் புதன்கிழமை நிலவரப்படி மார்ச் விற்பனையிலிருந்து 1,100% அதிகமாக உள்ளது. இது இதற்கு ஒரு உதாரணம் தான் என்கிறது அந்த அறிக்கை.


தொகுப்பு: மலையரசு