2022க்குள் 2,000 சிறு தொழில்முனைவோர்களை உருவாக்க Lenskart அமைத்துள்ள பிளான் இது!
இரண்டாம் நிலை நகரங்களே டார்கெட்!
கண்ணாடி சில்லறை விற்பனையாளர் யூனிகார்ன் நிறுவனமான லென்ஸ்கார்ட், இப்போது அதன் ஹோம்-ட்ரை-ஆன் (HTO) வணிகத்தின் மூலம் சிறுதொழில் முனைவோரை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட இருக்கிறது.
HTO வணிகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 சதவிகித வளர்ச்சியைக் கண்டது, 300 நிர்வாகிகள், எட்டு லட்சம் கண்ணாடிகளை வழங்கி, ஒவ்வொரு மாதமும் 10 நகரங்களில் 10 லட்சம் கண் பரிசோதனைகளை நடத்தினர். இந்த குழு இப்போது 2022க்குள் இந்தியாவின் அடுக்கு -2 நகரங்களில் 2,000 க்கும் மேற்பட்ட சிறு தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறு தொழில்முனைவோரை இணைப்பதன் மூலம் HTO வணிக மாதிரியை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. லென்ஸ்கார்ட்டின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பியூஷ் பன்சால், HTO என்பது லென்ஸ்கார்ட்டின் DNA அடிப்படையிலான ஒரு வலுவான வாடிக்கையாளர் சேவை அடிப்படையிலான மாதிரி ஆகும் என்றுள்ளார்.
தொடர்ந்து பேசியவர்,
“HTO வணிக மாதிரியின் கீழ், ஒவ்வொரு லென்ஸ்கார்ட் நிர்வாகியும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அதிகம் விற்பனையாகும் 150 வகையான பிரேம்களின் கொண்டு செல்வார்கள். வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப வடிவமைப்புகளின் தொகுப்பிலிருந்து தேர்வு செய்ய இது உதவும். மேலும், HTO இன் தொடர்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு, அதே நிர்வாகி ஒரு உறவு மேலாளராக இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம். அதன்மூலம் முந்தைய வருகைகள் மற்றும் வாங்குதல்களின் அடிப்படையில் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்வுகளை வழங்க முடியும்," என்றுள்ளார்.
தொடர்ந்து யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில், மைக்ரோ தொழில்முனைவோரை உருவாக்குவதை லென்ஸ்கார்ட் நிறுவனம் எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை பீயுஷ் விளக்குகிறார்.
கேள்வி : இதுவரை எத்தனை சிறு தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர், இன்னும் எத்தனை பேரை உருவாக்க விரும்புகிறீர்கள்?
பீயுஷ் : இந்தியாவில் 10 நகரங்களில் சுமார் 300 பார்ட்னர்கள் எங்களுக்கு இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் இன்னும் பல ஆப்டோமெட்ரிஸ்டுகளுக்கு வாய்ப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்தியா 'blind capital of the world' என்று அழைக்கப்படுகிறது, மேலும், 2022க்குள் இரண்டாம் நிலை நகரங்களில் 2,000 க்கும் மேற்பட்ட சிறு தொழில் முனைவோரை உருவாக்க போதுமான வாய்ப்புகள் உள்ளன.
கேள்வி : பார்ட்னர்களின் சராசரி வருவாய் என்ன?
பீயுஷ் : சராசரியாக, ஒரு ஆப்டோமெட்ரிஸ்ட் ஒரு மாதத்திற்கு ரூ.40,000-60,000 வருமானம் பெற முடியும். சில தொழில் முனைவோர் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விசுவாசமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இருப்பதால் ஒரு மாதத்திற்கு சராசரி வருவாயாக ரூ .1 லட்சம் வருமானம் பெருகின்றனர்.
கேள்வி : ஹோம்-ட்ரை-ஆன் (HTO) என்றால் என்ன? இது ஏன் தொடங்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் என்ன?
பீயுஷ் : ஹோம் ட்ரை-ஆன் (எச்.டி.ஓ) என்பது lenskart@home சேவையாகும். அதாவது வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே எங்கள் நிர்வாகிகள் மூலமாக கண் பரிசோதனை மற்றும் சட்ட தேர்வு சேவைகளை பெற முடியும். இது கடைகளில் நீங்கள் பெறுவது போன்ற ஒரு முழு-ஸ்டாக் சேவை. வாடிக்கையாளர்கள் விரும்பும் சூழலில் சேவையை (கண் பரிசோதனை அல்லது தயாரிப்பு தேர்வு) பெறக்கூடிய எங்கள் ஓம்னிகேனல் சலுகையின் ஒரு பகுதியாக நாங்கள் இதைத் தொடங்கினோம்.
சிம்பிளாக இதன் நோக்கம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உலகத்தரம் வாய்ந்த கண் பரிசோதனை மற்றும் சேவையை வழங்குவதாகும்.
கேள்வி : இது எப்படி சிறுதொழில் முனைவோருக்கு உதவுகிறது, மேலும் வாழ்வாதாரத்தை உருவாக்க உதவுகிறது?
பீயுஷ் : சிறு தொழில்முனைவோர் மாதிரி ஆப்டோமெட்ரிஸ்ட்டுகள் சொந்தமாக தொடங்க உதவுகிறது. லென்ஸ் கார்ட்@ஹோம் பிசினஸ் மூலம் சிறிய அளவிலான மொபைல் யூனிட்டை அமைக்க அவர்களுக்கு உதவுகிறோம், அங்கு அவர்கள் கண் பரிசோதனை மற்றும் பிரேம் சோதனை சேவைகளை வழங்க முடியும். அவர்கள் சுயாதீன தொழில்முனைவோராக வேலை செய்கிறார்கள், ஆனால் லென்ஸ்கார்ட் வழங்கும் சேவையின் அதே தரத்தை பராமரிக்கிறார்கள்.
கேள்வி : அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெறுகிறார்கள்?
பீயுஷ் : ஆப்டோமெட்ரிஸ்டுகள் நன்கு வரையறுக்கப்பட்ட தேர்வு செயல்முறை மூலம் செல்கின்றனர். அவர்கள் பல்வேறு கருவிகள் மற்றும் சேவை நிலைகளில் எங்கள் நிபுணர்கள் மூலம் 12-15 நாட்கள் வகுப்பறை மற்றும் களப் பயிற்சியும் பெறுகிறார்கள்.
ஆங்கிலத்தில்: சிந்து கஷ்யப் | தமிழில்: மலையரசு