Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

வாட்ஸ் அப் பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வு அளிக்கும் ஃபேஸ்புக் : அரசு தரப்பில் நிராகரிப்பு!

வாட்ஸ் அப் செய்தி அனுப்பியவர்களை கண்டறிய மாற்று தீர்வை ஃபேஸ்புக் தரப்பில் முன்வைக்கப்பட்டாலும், அரசு தரப்பில் இது ஏற்கப்படவில்லை எனத்தெரிகிறது.

வாட்ஸ் அப்  பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வு அளிக்கும் ஃபேஸ்புக் : அரசு தரப்பில் நிராகரிப்பு!

Wednesday September 18, 2019 , 2 min Read

சட்டப்பூர்வமான அமைப்புகள் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளில், வாட்ஸ் அப் செயல்படுவதற்கான வழிமுறை ஒன்றை ஃபேஸ்புக் சர்வதேச அதிகாரி நிக் கிலெக் முன்வைத்திருக்கிறார். எனினும், செய்திகள் அனுப்பியவரை கண்டறியும் வசதி வேண்டும் என்பதில் அரசு தரப்பு உறுதியாக உள்ளது.

பேஸ்புக்

செய்திகளை அனுப்பியவரை கண்டறியும் வசதி தேவை என்பது அரசு மற்றும் வாட்ஸ் அப் இடையிலான பிரச்சனையாக இருந்து வருகிறது. எனினும் ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் மேடையான வாட்ஸ் அப் இதுவரை, செய்திகளை முதலில் அனுப்பியவரை அடையாளம் காண்பது தொடர்பான இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இவ்வாறு செய்வது தனது தனியுரிமை மற்றும் என்கிரிப்ஷன் வசதிகளை மீறுவதாகும் என வாட்ஸ் அப் தெரிவிக்கிறது.


ஃபேஸ்புக் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு துணை தலைவர் நிக் கிலெக், அண்மையில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பின் போது, செய்திகளை முதலில் அனுப்பியவரை கண்டறியும் வசதிக்கு பதில் மெட்டா டேடா மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்துவது தொடர்பான மாற்று வசதிகளை முன்வைத்ததாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


புலனாய்வுத் துறைகளுக்கு உதவுவதற்காக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தொடர்புகளையும் பயன்படுத்திக்கொள்ள தயார் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.

”இந்திய மக்களின் பாதுகாப்பில் ஃபேஸ்புக் அக்கறை கொண்டுள்ளது. அமைச்சருடனான நிக் கிலெக் சந்திப்பு, நாங்கள் வழங்கும் ஒவ்வொரு செயலியிலும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அளிப்பதில் உறுதி மற்றும் இந்த பகிரப்பட்ட இலக்குகளை அடைவதில் இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான ஈடுபாடு ஆகியவற்றை உணர்த்த உதவியதாக, இது தொடர்பாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனையில் வாட்ஸ் அப் நிலைப்பாட்டை அறிந்த நபர், தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதால் அவற்றை அறிய முடியாது என்று தெரிவித்தார்.


உள்துறை அமைச்ச்சர் அமீத் ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமைச்சர் ரவிசங்க பிரசாத் உள்ளிட்டோருடனான சந்திப்புகளின் போது, இந்திய அரசு புலனாய்வு அமைப்புகளின் சட்டப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்க தயாராக இருக்கிறோம் ஆனால், மேடையில் பகிரப்படும் தகவல்களை தங்களால் படிக்க முடியாது என நிக் கிலெக் தெரிவித்துள்ளார்.

அழைப்புகள் பேசப்பட்ட நேரம், அளவு போன்ற துணை தகவல்களை தங்களால் அளிக்க முடியும் என அவர் கூறியதாக தெரிகிறது.

அரசு அமைப்புகள் சட்டப்பூர்வமாக அடையாளர்ம் காணும் பயனாளிகளின் துணை தகவல்களை அளிக்க முன்வருவதாகவும், ஆனால், செய்திகள் என்கிர்பிட் செய்யப்பட்டிருப்பதால் அவற்றை அறிய முடியாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


பொய்ச்செய்திகள், பயனாளிகள் நம்பகத்தன்மை மீறல், செயலிகளின் தகவல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சமூக ஊடக நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக வதந்திகளுக்கு வித்திடும் பொய்ச்செய்திகள் தொடர்பாக வாட்ஸ் அப் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. சமூக ஊடக செயல்பாடுகளை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.


செய்தி பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்