Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

போலி இன்வாய்ஸ் விவகாரம்: ஜி.எஸ்.டி பதிவு நடைமுறையை கடினமாக்க பரிந்துரை!

போலி இன்வாய்ஸ் பெறப்படுவதை தவிர்க்கும் வகையில் ஜி.எஸ்.டி பதிவு செயல்முறையை மேலும் கடினமாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போலி இன்வாய்ஸ் விவகாரம்: ஜி.எஸ்.டி பதிவு நடைமுறையை கடினமாக்க பரிந்துரை!

Wednesday November 25, 2020 , 2 min Read

போலி இன்வாய்ஸ்கள் வழங்கப்படுபதை தவிர்க்க, பதிவு நடைமுறையை மேலும் கடினமாக்க, ஜிஎஸ்.டி. கவுன்சிலின் சட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.


இது தொடர்பாக நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பிறகு, ஜி.எஸ்.டியில் புதியவர்கள் பதிவு செய்து கொள்ள ஆதார் அட்டை போன்ற நடைமுறையை அறிமுகம் செய்யலாம் என சட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் படி, ஆன்லைனில் நேரடி புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் மூலம் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம். வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஜிஎஸ்.டி சேவை மையங்கள் (GSKs). வாயிலாக இவற்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி பதிவுகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளுடன், பாஸ்போர்ட் சேவை மையங்கள் போல, ஜி.எஸ்.கே பதிவு வசதியை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி

பதிவு செய்ய ஆதார் அல்லாத செயல்முறையை நாடுபவர்களுக்கு மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு இது மிகவும் கடினமானதாக அமையும். இத்தகைய நபர்கள் நேரடி மற்றும் தனிப்பட்ட முறையிலான பதிவுக்கு உள்ளாக வேண்டும்.


இது போன்ற சூழலில் புதிதாக பதிவு செய்பவர்கள், நம்பகமான இரண்டு வரி செலுத்துபவர்களின் பரிந்துரை கடிதங்களை அளிக்க வேண்டும். சமர்பிக்கப்படும் ஆவணங்கள் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள், நம்பகமான மற்றும் நம்பகம் இல்லாத என வகைப்படுத்தப்படுவார்கள்.

நம்பகமான பிரிவில் வருபவர்கள் ஏழு நாட்களில் பதிவு செய்து கொள்ளலாம். இரண்டாவது பிரிவினருக்கு, வர்த்தக இடம் சரிபார்க்கப்பட்ட பிறகே 60 வேலை நாட்களுக்குள் பதிவு வழங்கப்படும்.

நம்பகம் இல்லாத பிரிவில் வருபவர்கள், வாங்குபவர்களிடம் இருந்து பெறப்படும் இன்புட் கிரெடிட், ரிட்டர்ன் பதிவு செய்த பிறகே அனுமதிக்கப்படும் மற்றும் டீலர்கள், 100 சதவீத வரியை, ஐடிசி மூலம் வழங்குவதற்கு பதில், தொகையின் ஒரு பகுதியை ரொக்கமாக வழங்க வேண்டும்.


இந்த புதிய பரிந்துரைகள், போலி பதிவை தவிர்க்க உதவுவதோடு, பதிவு செயல்முறையை கடினமானதாகவும் மாற்றும். எளிய முறையிலான பதிவு, ஜிஎஸ்டியின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. தற்போது பதிவு செயல்முறை கடினமானால், சிறு வர்த்தகர்கள் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.


செய்தி – டாக்ஸ்கேன்