ஃபிளிப்கார்ட் ‘பிக்பில்லியன் டேஸ்’ சேலில் சிறிய நகரங்களில் இருந்து குவிந்த வாடிக்கையாளர்கள்...
இந்த ஆண்டுக்கான பிளிப்கார்ட்டின் பிக்பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் முதல் நாளில் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட்டின் பிக்பில்லியன் டேஸ் முதல் நாள் விற்பனையில், மூன்றாம் அடுக்கு நகரங்களில் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களும் ஆன்லைன் விற்பனையில் பங்கேற்பது வரவேற்க தக்க அம்சமாக அமைகிறது.
ஃபிளிப்கார்ட்டின் பிக்பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை இம்மாதம் 16ம் தேதி துவங்கியது. வரும் 21 ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் நடத்தும் சிறப்பு ஆன்லைன் விற்பனையாக இது அமைகிறது.
இந்த விற்பனையின் முதல் நாள் நிகழ்வு பற்றி ஃபிளிப்கார்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,
“மெட்ரோ நகரங்கள் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களில் கிடைத்த வரவேற்போடு, பல்வேறு பிரிவுகளில் புதிய வாடிக்கையாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேல், மூன்றாம் அடுக்கு நகரங்களில் இருந்து வந்துள்ளனர்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் விற்பனையை மெட்ரோக்களை கடந்து, சிறிய நகரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியை ஃபிளிப்கார்ட் மேற்கொண்டு வருகிறது. தாய்மொழியில் பரிவர்த்தனை செய்யும் வசதி, குரல் வழி சேவை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இல்ல பிரிவில், மூன்றாம் அடுக்கு நகரங்களில் இருந்து 53 சதவீத புதிய வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாகவும், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் 50 சதவீத புதிய வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர் என் ஃபிளிப்கார்ட் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கொரோனா சூழலுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஆன்லைன் விற்பனை சிறிய தொழில் நிறுவனங்களுக்கு பிரகாசமாகத் துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 2,550 க்கும் மேற்பட்ட அஞ்சலக பகுதிகளில் இருந்து சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான விற்பனை அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
167 புதிய நகரங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள் ஆன்லைன் விற்பனையில் இணைந்துள்ளனர். ஜெய்பூர், சூரத், பானிபட் ஆகிய நகரங்கள் அதிக ஆதரவை பெற்றுள்ளன.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஆதரவும் அதிகரித்திருப்பதாக ஃபிள்ப்கார்ட் தெரிவித்துள்ளது. மொபைல், பர்னீச்சர், மின்னணு பொருட்கள் ஆகிய பிரிவுகளில் மாதத்தவணை வாய்ப்பு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா புஜாரி | தமிழில்-சைபர்சிம்மன்