Future of Work 2020 : இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப, வடிவமைப்பு மாநாட்டின் முக்கியக் கீற்றுகள்!
யுவர்ஸ்டோரியின், பியூச்சர் ஆப் வொர்க் மாநாட்டில் துறை சார்ந்த வல்லுனர்கள், பணியின் எதிர்காலம் குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
யுவர்ஸ்டோரி நடத்தும் முன்னணி நிகழ்ச்சியான, இந்தியாவின் மிகப்பெரிய பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு மாநாடான ‘பியூச்சர் ஆப் வொர்க்’ (Future of Work 2020), அண்மையில் பெங்களுருவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிந்தனையைத் தூண்டும் வகையில் நடைப்பெற்ற விவாதங்கள், கலந்துரையாடல்களில் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் உலகைச்சேர்ந்த வல்லுனர்கள், வர்த்தகத்தின் எதிர்கால உத்திகள் தொடர்பான தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பெரிதாக வளர்ச்சி பெற்றிருப்பதோடு, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் இளம் வல்லுனர்கள் எதிர்கால நுட்பங்கள் தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் மேடையாகவும் உருவாகியுள்ளது.
பெங்களூருவில் தாஜ் யஷ்வந்த்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில்முனைவோர் உரையாற்ற, 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியில், பொருட்களை மாற்றி அமைப்பது, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மற்றும் இயந்திரக் கற்றல் (எம்.எல்) ஆகியவற்றின் தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
ஏஐ எதிர்காலம்
சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் துவங்கி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்திய அரசும் இதில் பின் தங்கிவிடவில்லை. தேசத்தின் ஏ.ஐ திறனை மேம்படுத்தும் குறிக்கோளுடன் நிட்டி ஆயோக் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், இது தொடர்பான தகவல்களை நிட்டி ஆயோக் திட்ட இயக்குனர் அர்னாப் குமார் பகிர்ந்து கொண்டார். செயல்படுத்தக்கூடிய தீர்வுகளுக்காக ஏ.ஐ நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார்.
இந்திய விவசாயத்திற்கான மையத் தகவல் அமைப்பை உருவாக்குவது, சுகாதாரத்தில் அடிப்படைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது, ஏ.ஐ வல்லுனர்களை நாட்டின் முக்கிய சவால்களுக்குத் தீர்வு காண வைப்பது ஆகியவை இதில் அடங்கும்.
“ஏ.ஐ மற்றும் எம்.எல் ஆகிய துறைகளில் உள்ள சர்வதேச வல்லுனர்களில் பலர் இந்தியர்கள் என்றாலும் அவர்கள் இந்தியாவில் பணியாற்றவில்லை. அவர்களை இந்தியாவுக்கு திரும்பி வர வைத்து, நாட்டின் முதன்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வைப்பது எப்படி என்பது எங்கள் முயற்சியாக இருக்கிறது” என்று அர்னாப் குமார் தெரிவித்தார்.
டேட்டா செட்களை உருவாக்குவதில் துவங்கி, ஏஐ நுட்பங்களை உருவாக்குவது மற்றும் நிறுவன அமைப்பு, பணி கலாச்சாரம் சீரமைப்பு ஆகியவற்றில் இருந்து தொழில்நுட்பம் சார்ந்த சூழலில் பணியாற்றும் இளம் வல்லுனர்களை நோக்கி விவாதம் திரும்பியது.
இன்வென்ஷன் ஆல்கமி கன்சல்டிங் நிர்வாக இயக்குனர் மற்றும் ஹார்வர்டு பிஸ்னஸ் பப்ளிஷிங்கில் முக்கியப் பங்கு வகிப்பவருமான பார்வதி மேனன், இந்தப் பிரிவினர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அலுவலக அரசியல், கட்டுப்படுத்தும் பணி கலாச்சாரம், மாறிவரும் பணி பொறுப்புகள் குறித்து அவர் பேசினார்.
நிறுவனங்களில் தொழில்நுட்பம் அதிக அளவில் ஏற்கப்படும் நிலையில், தொழில்நுட்பம் பற்றிய புரிதல் உள்ளவர்கள் தங்கள் தனிப்பட்ட பணி செயல்பாடுகளைக் கொண்டு வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவைத்தவிர, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், செக்கோயா கேபிடல் சி.டி.ஓ., அனந்தமாய் ராய்சவுத்ரி, சாவேஸ் தியாரி பற்றி பேசினார். ஹாப்டிக்கின் ஸ்வபன் ராஜ்தேவ், ஏ.ஐ உருவாக்கத்தில் பிராடகட் மேலாளர்கள் பங்கு பற்றி விளக்கினார். ஆதார் முன்மை ஆர்கிடெக்ட் பிரமோத் வர்மா, இந்தத் திட்டம் பற்றி பகிர்ந்து கொண்டார்.
வடிவமைப்பில் அடுத்து என்ன?
இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழலைச்சேர்ந்த வடிவமைப்புத் தலைவர்கள், இரண்டு குழுக்களாக வடிவமைப்பின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர். தி ஹார்டு காபியின் மீத்தா மல்கோத்ரா வழிநடத்திய முதல் குழு விவாதத்தில், ரெவைரி (Reverie) விவேகனந்தா பனி, மீஷூவின் ஷயாக் சென், சுமி கிவால்னி (EpiFi) ஆகியோர் பங்கேற்றனர்.
அதன் பிறகு, டிசைன் அப் நிறுவனர் ஜே ததார், தொழில்நுட்ப உலகில் வடிவமைப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார். வடிவமைப்பின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பான டிசைன் அப் அறிக்கை பற்றியும் அவர் விவரித்தார்.
அதே போல, போன்பே, பிராடக்ட் டிசைன் இயக்குனர் நவ்னீத் நாயர், ஆய்வு மற்றும் மேம்பாட்டில் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஃபின்டெக்கிற்கான வடிவமைப்பு தொடர்பான இரண்டாவது குழு விவாதத்தில், ரேசர் பே வடிவமைப்பு மேலாளர் செட்டி அருண், ஹெட் அவுட், பிராடகட் மற்றும் டிசைன் தலைவர் சித்தார்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய நிதிநுட்பத்துறையில் விதிமுறைகள், யூபிஐ மேடையின் சிறப்புகள் குறித்து இவர்கள் பேசினர். இந்தியா டிஜிட்டல்மயமாகி கொண்டிருந்தாலும், காப்பீடு மற்றும் முதலீடு துறைகளில் காத்திருக்கும் நீண்ட பயணங்கள் பற்றியும் குறிப்பிட்டனர்.
கற்றல்
முதல் நாள் போலவே, இரண்டாம் நாள் நிகழ்ச்சியிலும், பல்வேறு பயிலறங்குகள் நடைபெற்றன. முதல் பயிலறங்கில், பார்வதி மேனன், மென் திறன்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். பணியிடங்களில் பழக்க வழக்கம் சார்ந்த தடைகளை எதிர்கொள்வது மற்றும் எதிர்கால சவால்களை சந்திப்பது பற்றி அவர் பேசினார்.
வோடோபோன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் டிஜிட்டல் சேனல் பொது மேலாளர் நவ்னத் வாடேகர், ஸ்டார்ட் அப் வளர்ச்சி குறித்து பாடம் நடத்தினார். ஸ்டார்ட் அப்களுக்கு உதவுவதற்கான நிறுவனத்தின் பிளக்சி கிட் பற்றி அவர் விவரித்தார். இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ் உள்ளிட்டவை குறித்தும் அவர் பேசினார்.
வடிவமைப்பின் வர்த்தகம் தலைப்பின் கீழ், மீத்தா மல்கோத்ரா, வர்த்தகத் துறையில் கதை சொல்லலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பார்வையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய படி அவர், பிராடக்ட் மேலாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தங்கள் வடிவமைப்பை சிறப்பாக வழங்கும் வழிகளை குறித்து விளக்கினார்.
ஓன்பாத் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷ்ரேயா சதீஷ், ஸ்கிரிப்பாக்ஸ் வடிவமைப்பு துணைத்தலைவர் சமீர் பிவானி, முக்கிய திறன் பற்றி பேசினர். இறுதியாக, அட்டர்வைஸ் (Utterwise ) இணை நிறுவனர் ரிபுல் குமார், பயனாளிகள் ஆய்வு பற்றி பேசினார்.
முதல் நாள் போலவே, இறுதி பகுதியில், யுவர் ஸ்டோரி நிறுவனர்ர் ஷ்ரத்தா ஷர்மா மற்றும் ஸ்விக்கி தொழில்நுட்பத் தலைவர் டேல் வாஸ் இடையே சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைப்பெற்றது.
CFO at 3one4 Capital நிறுவன பார்ட்னர் சித்தார்த் பை மற்றும் எச்.எஸ்.ஏ அட்வகேட்ஸ் இணை பார்ட்னர் வாட்சல் கவுர் ஆகியோருடன், ஷ்ரத்தா ஷர்மா துடிப்பான கலந்துரையாடலை மேற்கொண்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
ஆங்கிலத்தில்: சுத்ரிஷ்னா கோஷ் & டெபோலினா பிஸ்வாஸ் | தமிழில் : சைபர்சிம்மன்