CSK-வுக்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை; குஜராத் அணிக்கு என்ன சொன்னார் தெரியுமா?
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
வீரர்கள் ஏலம் முதல் பரிசுத்தொகை வரை கோடிகள் புரளும் ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கின் ஐபிஎல் சீசன் 16 பிரமாண்டமாக முடிந்தது. இந்த கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் 5ப்வது முறையாக வென்றது.
CSK vs GT
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மாற்று நாளான நேற்றும் மழைக்கு வாய்ப்பிருந்ததால் டாஸ் வென்ற அணியின் கேப்டனான தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர்.
தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்துவீச்சும், தோனியின் மின்னல் வேக ஸ்ட்டம்பிங்கும் சேர்ந்ததில் கில் அவுட்டானார். பிறகு வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 8 பவுண்டரி, 6 சிக்சர்களை பறக்கவிட்டார். இருப்பினும், சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், 96 ரன்களில் ஆட்டமிழந்தார். சாஹா 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் ஹர்திக் பாண்டியா (12 பந்துகளில் 21 ரன்; 2 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.
இதனையடுத்து, குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவிந்தது.
சிஎஸ்கே ஆட்டத்தை குறுக்கிட்ட மழை:
இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கிய போது, முதல் ஓவரில் 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், நள்ளிரவு 12.10 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
சவால் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ருதுராஜ் ஆகியோரின் வெறித்தனமான ஆட்டம் நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. ருதுராஜ் 26 ரன்களிலும், கான்வே 47 ரன்களில் ஆட்டமிழந்தனர். மழை ஓய்ந்த பின்னர் தொடங்கிய சிஎஸ்கே அணியின் ரன் மழையை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் அணி வீரர்கள் திணற ஆரம்பித்தனர்.
அடுத்து களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே சில அபாரமான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து ரன் ரேட்டை குறைத்தார். ரஹானேவின் பார்ட்னர் சிவம் துபே ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும், கடைசியில் ரஷித் கான் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.
தனது ஓய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு தனது கடைசி மேட்ச்சில் 13வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை தீப்பற்ற வைத்தார். ராயுடு ஆட்டமிழக்க, தோனி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் உருவானது. இதனால் சென்னை அணியின் கதை முடிந்துவிட்டதாகவே ரசிகர்கள் எண்ணினர்.
கடைசி 2 பந்தில் திரில் காட்டிய ஜடேஜா:
ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சிஎஸ்கே வெற்றிக்கோப்பையை தட்டித்தூக்க கடைசி இரண்டு பந்தில் ஜடேஜா காட்டிய மேஜிக் காரணமாக அமைந்தது.
சிஎஸ்கே அணிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸரும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து ஐபிஎல்லில் சிஎஸ்கே ஐந்தாவது முறையாக சாம்பியனாக்கினார்.
இதன் மூலம் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்த டெவோன் கான்வே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோனி தலைமையிலான அணி 5வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
பரிசுத்தொகை:
சாம்பியன்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 20 கோடி + கோப்பை
இரண்டாம் இடம்: குஜராத் டைட்டன்ஸ், ரூ. 13 கோடி.
மூன்றாவது இடம்: மும்பை இந்தியன்ஸ், ரூ. 7 கோடி.
நான்காம் இடம்: லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ், ரூ.6.5 கோடி.
வளர்ந்து வரும் வீரர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கோப்பை + ரூ. 20 லட்சம்.
தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய சுப்மன் கில்லிற்கு ரூ.10 லட்சம்
அதிக விக்கெட் எடுத்து பர்பிள் கேப்பை சொந்தமாக்கிய முகமது ஷமிக்கு ரூ.10 லட்சம்
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டேவான் கான்வே ரூ.5 லட்சம்
சூப்பர் ஸ்ட்ரைக்கர்: கிளென் மேக்ஸ்வெல், கோப்பையுடன் ரூ. 10 லட்சம்
அதிக சிக்ஸர்களை விளாசிய ஃபாஃப் டுபிளெசிஸ் கோப்பயுடன் ரூ. 12 லட்சம்
ஃபேர்பிளே விருது: டெல்லி கேபிடல்ஸ்
பிரபலங்கள் வாழ்த்து:
5வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கூகுள் சிஇஓவுமான சுந்தர் பிச்சையும் தனது ஸ்டைலில் சிஎஸ்கேவிற்கு வாழ்த்து தெரிவித்துளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவது:
“எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பானது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவான அணியாக திரும்பி வர வாழ்த்துக்கள்...” என்று பதிவிட்டுள்ளார்.
மழை காரணமாக ஐபிஎல் இறுதிப்போட்டி ஒரு நாள் தள்ளிப்போனாலும், சிஎஸ்கே-வின் அபார வெற்றி அனைவரையும் சந்தோஷ மழையில் ஆழ்த்தியுள்ளது மறுப்பதற்கில்லை.
'தோனி என் கையில ஐபிஎல் கப்பை கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னார்' - சிஎஸ்கே பஸ் டிரைவர் தண்டபானி நெகிழ்ச்சி!