வங்கி இயக்குநரின் வள்ளல் குணம்; ரூ.3.95 கோடி பங்குகளை 5 ஊழியர்களுக்கு பரிசாகக் கொடுத்து அசத்தல்!
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வைத்தியநாதன் தனது ஊழியர்கள் 5 பேருக்கு ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வைத்தியநாதன் தனது ஊழியர்கள் 5 பேருக்கு ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வைத்தியநாதன் ரூ.3.95 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வங்கியின் 9 லட்சம் பங்குகளை தனது வங்கி சாராத 5 ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். தனது பயிற்சியாளர், வீட்டு உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உட்பட ஐந்து நபர்களுக்கு வீடுகளை வாங்க உதவுவதற்காக பரிசளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி அன்று, வைத்தியநாதன் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 9 லட்சம் மதிப்பிலான ஈக்விட்டி பங்குகளை பரிசாக வழங்கியுள்ளதாக ஒழுங்குமுறைத் தாக்கல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது பயிற்சியாளர் ரமேஷ் ராஜுவுக்கு 3 லட்சம் பங்குகளை பரிசாக அளித்துள்ளார்; வீட்டு உதவியாளர் பிரஞ்சல் நர்வேகர் மற்றும் டிரைவர் அழகர்சாமி சி முனாபர் ஆகியோருக்கு தலா 2 லட்சம் பங்குகளையும், அலுவலக உதவி ஊழியர் தீபக் பதரே மற்றும் வீட்டு உதவியாளர் சந்தோஷ் ஜோகலே ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும் பரிசாகக் கொடுத்துள்ளார்.
பிஎஸ்இயில் திங்கட்கிழமை இறுதி கணக்கிட்டின் படி, ஒரு பங்குகளின் விலை ரூ.43.90 என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை வைத்து கணக்கிட்டால் வைத்தியநாதன் பரிசாக அளித்த 9 லட்சம் பங்குகளின் மதிப்பு 3 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக சேவையை ஊக்குவிக்கும் விதமாக ருக்மணி சமூக நல அறக்கட்டளைக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஈக்விட்டி பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள வங்கி தரப்பு,
“பரிசுகள் மற்றும் சமூக சேவைக்காக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 11 லட்சம் ஈக்விட்டி பங்குகள் வெளிப்படையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ வைத்தியநாதன் எவ்வித நன்மையும் பெறவில்லை. ஒதுக்கப்பட்ட பங்குகள் பங்குகளாகும். மேலும், இந்த பரிவர்த்தனைகளில் இருந்து வைத்தியநாதன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த நன்மையும் பெறவில்லை,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட பங்குகளை வைத்தியநாதன் தனது ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்தது சோசியல் மீடியாவில் வைரலாகி, பாராட்டுக்களை குவித்து வரும் அதே நிலையில், இதற்கு முன்பும், தனக்கு தொடர்பில்லாத சில நபர்களுக்கு அவர் தனது தனிப்பட்ட தகுதியில் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் என்ற தகவல் ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
தமிழில்: கனிமொழி