இதய நோயை ஆரம்ப நிலையிலே கண்டறியக் கூடிய பயோசென்சார் உருவாக்கிய ஐஐடி குழு!
இந்தியாவில் 2015-ம் ஆண்டில் மாரடைப்பால் மட்டுமே 21 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியாவில் சுகாதார பராமரிப்பு எப்போதும் கவலை அளிப்பதாகவே உள்ளது. 1.3 பில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகை இருப்பதால் அடிப்படை சுகாதார பராமரிப்பு அளிக்கப்படுவது சவாலாகவே உள்ளது.
இந்தியாவில் 2015-ம் ஆண்டில் மாரடைப்பால் மட்டுமே 2.1 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதில் கார்டியோவாஸ்குலர் நோய் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தமுடியும்.
இந்த பிரச்சனையைக் கையாளவும் கார்டியோவாஸ்குலர் நோய் மற்றும் இதயம் தொடர்பான மற்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் ஐஐடி ஹைதராபாத் ஒரு பயோசென்சார் கருவியை உருவாக்கியுள்ளது. இந்தக் கருவியானது அதிவேகமாகவும் உணர்திறனுடனும் நம்பகத்தன்மையுடனும் இதய நோயைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஐஐடி ஹைதராபாத்தில் உள்ள பயோமெடிக்கல் பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் ரேனு ஜான் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வினை மற்ற நோய்களைக் கண்டறியவும் விரிவுபடுத்தலாம்.
பயோசென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள நானோஸ்பியர்களுடன் சேர்க்கப்படும் பயோமார்கர்/ஆன்டிபாடி வகையை மாற்றுவதன் மூலம் இது சாத்தியமாகும்.
பேராசிரியர் ரேனு இந்த ஆய்வு குறித்து பேசும்போது,
“பயோமார்க்கர்கள் ஆரோக்கியம் மற்றும் நோய் நிலையைக் குறிக்கும் உயிரியல் மூலக்கூறுகள். இவை சில உடலியல் நிலைக்கு எதிர்வினையாக உடலில் வெளியேறும் குறிப்பிட்ட ரசாயனங்களாகும். உதாரணத்திற்கு கார்டியாக் ட்ரோபோனின் இதய நோய் தொடர்பான பயோமார்க்கர்கள் ஆகும். வழக்கமாக இவை ரத்தஓட்டத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் ஆன்டிபாடிக்களைப் பயன்படுத்தி கண்டறியப்படும்,” என்றார்.
இந்த பயோசென்சார்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களில் இணைக்கப்பட்டிருப்பவை அல்ல. மாறாக இந்த பயோசென்சார்கள் திரவங்களின் சிறிய கொள்ளளவையும் கையாளாக்கூடியதாகும்.
இந்த பயோசென்சார்கள் மனிதனின் ஒரே ஒரு தலைமுடியின் அடர்த்தியைக் காட்டிலும் நூறாயிரம் மடங்கு குறைவான நானோ பொருட்களுடன் இணைக்கப்படுகிறது. பயோசென்சார்கள் உயிர்வேதியியல் எதிர்வினையை ஆப்டிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் சிக்னலாக மாற்ற இந்த நானோ பொருட்கள் உதவுகிறது. இதனால் கார்டியோவாஸ்குலர் நோய்கள் திறம்பட கண்டறியப்படுவது சாத்தியமாகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA