சென்னை ஐஐடி மின் வாகன சார்ஜர் ஸ்டார்ட் அப் 'Plugzmart' ரூ.3.63 கோடி நிதி திரட்டியது!
பிளக்ஸ்மார்ட் இந்த நிதியை ஆய்வு, உற்பத்தியை மேம்படுத்த, 2025 ம் ஆண்டில் ஒரு மில்லியன் சார்ஜிங் போர்ட்களை விநியோகிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஐஐடி சென்னையில் உருவான ஸ்டார்ட் அப்பான 'பிளக்ஸ்மார்ட்' '
', விதை நிதியாக ரூ.3.63 கோடி நிதி திரட்டியுள்ளது.ஆரம்ப நிலை விசி புளு ஹில் கேபிடல் தலைமையில், எஸ்.கே.எஸ்.எல்லின் மீரா ரெட்டி, கார்த்திக் மெய்யப்பன், எல்.ராஜ்குமார், சிவதாஸ் ராகவா, ஷைலஜா ரெட்டி ஆகிய முதலீட்டாளர்கள் இந்த சுற்றில் பங்கேற்றனர்.
ஸ்மார்ட் இவி சார்ஜர் நிறுவனமான 'பிளக்ஸ்மார்ட்', இந்த நிதியை ஆய்வுப் பணிகளை மேம்படுத்த மற்றும் குழுவை அதிகரிக்கவும், கையில் உள்ள ஆர்டர்களுக்கு ஏற்ப உற்பத்தியை மேம்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் வடிவமைத்து உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சார்ஜர் போர்ட்களை விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின் வாகனங்களுக்கான சார்ஜர்களை தயாரிக்கும் மூல நிறுவனமாக மற்றும் மின் சார்ஜிங்கிற்கான சாஸ் சேவை நிறுவனமாகவும் ’பிளக்ஸ்மார்ட்’ (Plugzmart) விளங்குகிறது. சார்ஜர்களுடன் செயல்திறன் மிக்க வகையில் தொடர்பு கொள்ள ஐஓடி கொண்ட சார்ஜிங் நிர்வாக அமைப்பையும் பெற்றுள்ளது.
2,3 மற்றும் 4 சக்கர வாகங்களுக்கான 9 பொருட்களை நிறுவனம் கொண்டுள்ளது.
விவேக் சமயநாதன் மற்றும் ராகவேந்திரா ரவிசந்திரனால் துவக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், ஏசி சார்ஜர்கள் முதல் டிசி சார்ஜர்கள் வரை கொண்டுள்ளது.
“இந்தியாவில் இப்போது பெரும்பாலான மின் வாகன சார்ஜர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன மற்றும் தரம் குறைவானவை. மின்வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் சார்ஜிங் முனைகளில் இருந்து சார்ஜர்களுக்கான தேவை அதிகரிக்க உள்ளது. இதற்கேற்ப உற்பத்தியை மேம்படுத்த இந்த நிதி உதவும்,” என்று இணை நிறுவனர் ராகவேந்திரா ரவிசந்திரன் கூறுகிறார்.
பிளக்ஸ்மார்ட் உருவாக்கியுள்ள ஸ்மார்ட் சார்ஜர்கள், மென்பொருள் சார்ந்த சார்ஜிங் அமைப்பை கொண்டுள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு தேவைக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவிக்கிறது.
வாய்ப்புள்ள கிரிட்டிற்கு ஏற்ப சார்ஜிங்கை அதிகமாக்க அல்கோரிதம் உதவும். ஒரு கிரிட்டில் இணைக்கப்பட்ட வாகனங்கள் அதிகரிக்கவும் இது உதவும். இதை மூன்றாம் தரப்பு சார்ஜரிலும் பயன்படுத்தலாம்.
“இந்தியாவில் மின் வாகனப் பிரிவு வளர்ச்சி பெற்று வரும் நிலையில், பிளக்ஸ்மார்ட்டுடன் இணைந்து முதலீடு செய்வதில் உற்சாகம் கொள்கிறோம். இந்தியாவில் உருவாக்கப்படும் தரமான மின் வாகன சார்ஜரில் பெரிய இடைவெளி இருக்கிறது. இதை பிளக்ஸ்மார்ட் நிறைவேற்றும் என நம்புகிறோம்,” என புளு ஹில் கேபிடம் பாட்னர் மனு ஐயர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan