பிளாஸ்டிக்கை சுற்றுச் சூழலுக்கு உகந்த வழியில் சிதைக்கும் முறையை கண்டுபிடித்துள்ள ஐஐடி மெட்ராஸ் குழு!
நாம் ஆண்டுதோறும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாகவும் இவை நமது நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன் நமது உணவையும் மாசுபடுத்துகிறது என்று ஐக்கிய நாடுகள் தகவல் தெரிவிக்கிறது.
நாம் ஆண்டுதோறும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாகவும் இவை நமது நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன் நமது உணவையும் மாசுபடுத்துகிறது என்று ஐக்கிய நாடுகள் தகவல் தெரிவிக்கிறது.
பிளாஸ்டிக்கினால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்கவும் பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிபுணர்களும் விஞ்ஞானிகளும் இதற்கான மாற்று தீர்வு குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் டெஃப்லான், பாலியெத்திலின், பாலிப்ரொப்பிலீன் போன்ற பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களை சிதைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளது ஐஐடி-மெட்ராஸ் குழு.
உதாரணத்திற்கு இக்குழு வேதியியல் ரீதியாக எதிர்வினை ஆற்றாத, உறுதியான பிளாஸ்டிக் ஃப்ளோரோபாலிமரான பாலிடெட்ராபுளோரோஎதிலீனை (PTFE) சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிதைக்கின்றனர். இந்த ரசாயனம் கொண்டே டெஃப்லான் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு சிதைக்கும் செயல்முறையானது அறிவியல் செயல்முறைக்குப் பிறகு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த அறிவியல் செயல்முறையில் உலோகங்கள், க்ளூக்கோஸ், டெஃப்லான் மற்றும் இதர சர்க்கரைகள் பூசப்பட்ட மேக்னடிக் ஸ்டிர்ரர் ஆகியவை இடம்பெற்றதாகவும் Financial Express குறிப்பிடுகிறது.
ஐஐடி-மெட்ராஸ் வேதியியல் துறை பேராசிரியர் டி பிரதீப் ’தி இந்து’ உடனான உரையாடலின்போது,
”நாங்கள் பாலியெத்திலின் மற்றும் பாலியெத்திலின் டெரஃப்தாலேட்டில் (PET) இந்த பரிசோதனையை முயற்சி செய்தோம். அதேபோன்ற முடிவுகளே கிடைத்தது. PTFE உடன் ஒப்பிடுகையில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ் கலவையில் ட்ரைபோஎலக்ட்ரிக் சார்ஜ் உற்பத்தி குறைவாக இருப்பதால் எதிர்வினை மெதுவாக ஏற்பட்டது,” என்றார்.
இந்தச் செயல்முறையில் 1,000 பிபிஎம் குளுக்கோஸ் மற்றும் உலோக அயனி கொண்ட தண்ணீரில் தொடர்ந்து ஃப்ளூரோபாலிமரைக் கலக்கப்பட்டது. இவ்வாறு 70 டிகிரி செல்ஷியஸில் சுமார் 15 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவேண்டும். இக்குழுவினர் பாலிப்ரொபிலினை சிதைக்கவும் இதே செயல்முறை உதவியது.
பிரதீப் கூறும்போது,
“சில நாட்களுக்குப் பிறகு அசாதாரணமான ஒன்றை நாங்கள் கவனித்தோம். மேற்பரப்பில் பிரகாசமான சிகப்பு ஒளிவுடன்கூடிய சிறு துகள்கள் மிதப்பதை கவனித்தோம்,” என்றார்.
செயல்முறை
சிறு துண்டு, டேப், தட்டு என டெஃப்லானை பல வடிவங்களில் ஐஐடி-மெட்ராஸ் குழு சோதனை செய்தது. இதே சோதனையை டெஃப்லான் குவளையைக் கொண்டு மீண்டும் மேற்கொண்டது. இதன் முடிவுகளும் அதேபோன்று வந்தது. ஆனால் தங்கத்திற்கு பதிலாக செம்பு, வெள்ளி மற்றும் இரும்பு பயன்படுத்தப்பட்டபோது எந்தவித பிரகாச சிகப்பு வண்ணமும் வெளிப்படவில்லை. பிரதீப் கூறும்போது,
”பிறகு ட்ரைபோஎலக்ட்ரிக் சிதைப்பு மூலம் PTFE பாலிமர் மூலக்கூறுகளாக உடைக்கப்படும் என்கிற தகவலைத் தெரிந்துகொண்டோம். பாலிமர் தொடர்ந்து தண்ணீரில் கலக்கப்படும்போது டெஃப்லானுக்கும் தண்ணீருக்குமான இடைமுகத்தில் மின்னழுத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA