அமெரிக்க கூட்டு முயற்சியுடன் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு செமிகண்டக்டர் ஆலை அமைகிறது!
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான பேச்சு வார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவுடனான கூட்டு முயற்சியில், இந்தியாவில் முதல் தேசிய செமிகண்டக்டர் பேப்ரிகேஷன் ஆலை அமைக்கப்பட உள்ளது. இரு நாடுகளிலும் ராணுவ பயன்பாட்டிற்கான சிப்கள் மற்றும் முக்கிய தொலைத்தொடர்பு , மின்னணு பொருட்களில் பயன்படுத்தப்பட உள்ள சிப்கள் இந்த ஆலையில் தயாரிக்கப்படும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த இந்தியா அமெரிக்க கூட்டு முயற்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியா அமெரிக்கா இடையிலான இந்த முதல் செமிகண்டக்டர் பேப்ரிகேஷன் திட்டத்தை திருப்பு முனை ஒப்பந்தம் என இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய செமிகண்டக்டர் திட்ட ஆதரவுடன் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும் மற்றும் பாரத் செமி, 3rdiTech, அமெரிக்க ஸ்பேஸ் போர்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான வியூக நோக்கிலான கூட்டு முயற்சியின் அங்கமாக அமையும்.
இந்தியாவின் முதல் திட்டமாக விளங்குவதோடு, தேசிய பாதுகாப்பிற்கான முதல் பல்பொருள் பேப் திட்டமாக அமைவதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த மதிப்பு கொண்ட தொழில்நுட்பத்திற்காக முதல் முறையாக இந்தியாவுடன் கூட்டு முயற்சிக்கு அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது என்றும், சிவில் அணுஉலை ஒப்பந்தம் போல இது முக்கியமானது என்றும் தெரிவிக்கின்றனர்.
"தேசிய பாதுகாப்பு, அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு, பசுமை எரிசக்தி பயன்பாடு ஆகியவற்றுக்கான, மேம்பட்ட சென்சிங், தகவல் தொடர்பு, ஆற்றல் மின்னணு சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் புதிய செமிகண்டக்டர் பேப் ஆலையை அமைப்பது திருப்புமுனை ஒப்பந்தம் என ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடி கூறியதாக,” இத்திட்டம் தொடர்பான விளக்க குறிப்பு தெரிவிக்கிறது.
"இன்பிராரெட், கேலியம் நைட்ரேட், சிலிகான் கார்பைடு செமிகண்டக்டர்களை தயாரிக்கும் இந்த ஆலை இந்தியாவின் செமிகண்டக்டர் திட்ட ஆதரவுடன் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும் மற்றும் பாரத் செமி, 3rdiTech, அமெரிக்க ஸ்பேஸ் போர்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான வியூக நோக்கிலான கூட்டு முயற்சியின் அங்கமாக அமையும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி என அழைக்கப்படும் இந்த திட்டம், மேம்பட்ட சென்சிங், தகவல் தொடர்பு, அதிக ஆற்றல் மின்னணு போன்ற நவீன போரின் முக்கிய முக்கிய தூண்களில் கவனம் செலுத்தும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மிகவும் ஊக்கம் அளிக்கும் நடவடிக்கை என்றும், இரு தரப்பில் தேசிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்புடையது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான பொருட்களில் இதன் பயன்பாடு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
"இன்பிராரெட், கேலியம் நைட்ரேட், சிலிகான் கார்பைடு செமிகண்டக்டர்களை தயாரிக்கும் நோக்கம் கொண்டது என்ற வகையில் இது மிகவும் மாறுபட்ட பேப் திட்டம்," என்று அவர் தெரிவித்தார்.
"இந்திய செமிகண்டக்டர் திட்ட ஆதரவு பெற்றிருப்பதோடு, வியூக தொழில்நுட்ப கூட்டின் அங்கமாகவும் இருக்கும். இந்திய செமிகண்டக்டர் துறையில் காணப்படும் அதிகரித்து வரும் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறனின் அடையளமாக இது அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அமெரிக்க உறவில் இது முக்கிய தருணமாக அமையும் என்றும் பெயர் குறிப்பிட விருப்பாத முக்கிய பிரமுகர் ஒருவர் கூறினார். இந்தியா தற்போது தேசிய பாதுகாப்பு தொடர்பான சிப்களை ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் தருவிப்பதாக கருதப்படுகிறது.
குளோபல் பவுண்டரீஸ் மூலம் கொல்கத்தாவில் அமைக்கப்படும் ஜிஎப் கொல்கத்தா பவர் செண்டர் உள்ளிட்ட உறுதியான, பாதுகாப்பான சிப் தயாரிப்பிற்கான கூட்டு முயற்சியை இரு நாட்டு தலைவர்களும் பாராட்டியதாகவும் விளக்க குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தைக்கான உறுதியான, பாதுகாப்பான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதகான முயற்சியையும் தலைவர்கள் வரவேற்றனர். சர்வதேச ஏற்றுமதிக்காக ஃபோர்டு நிறுவன சென்னை ஆலை மீண்டும் திறக்கப்பட இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
5ஜி நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு சார்ந்த கூட்டு முயற்சிகளையும், தலைவர்கள் வரவேற்றனர்.
இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தெற்காசியாலும், உலக அளவிலும் பணியாளர் பயிற்சியை வளர்த்தெடுக்க 7 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஆசிய ஓபன் ரான் அகாடமியை விரிவாக்குவதற்கான சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பின் திட்டமும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan