‘கோவிட்-19க்கு பிறகான சவால்களை சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்வது எப்படி?’ - Indiamart சிஇஒ தினேஷ் அகர்வால்
இந்தியா எம்.எஸ்.எம்.இ மாநாட்டின் போது நடைபெற்ற உரையாடலில் இந்தியாமார்ட் நிறுவனர், சி.இ.ஓ, தினேஷ் அகர்வால், இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போதைய மற்றும் கோவிட்-19 க்கு பிந்தைய சவால்களை எதிர்கொள்ளலாம் என பேசினார்.
கோவிட்-19 க்கு பிந்தைய புதிய இயல்பு நிலையில், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நீண்ட கால இலக்குகளை அடையவும், புதிய இயல்பு நிலையை எதிர்கொள்ளவும், தங்கள் உத்திகளை மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சவால்களை எதிர்கொண்டு, உற்பத்தியை உறுதி செய்து, பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு, நிறுவனத்திற்கான மதிப்பை உண்டாக்க வேண்டியிருக்கிறது.
யுவர்ஸ்டோரி நடத்திய ‘இந்தியா எம்.எஸ்.எம்.இ’ மாநாட்டின், ஐந்தாம் நாள் நிகழ்வின் போது நடைபெற்ற உரையாடலில் இந்தியாமார்ட் நிறுவனர், சி.இ.ஓ, இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போதைய மற்றும் கோவிட்-19 க்கு பிந்தைய சவால்களை எதிர்கொள்ள, கொள்கை முடிவுகளை சிறப்பாக செயல்படுத்துவது உதவும் எனப் பேசினார்.
இந்தியா எம்.எஸ்.எம்.இ மாநாடு 2022 – நான்காம் பதிப்பு 21 முதல் 27 வரை ஒரு வார காலம் நடைபெற்றது.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
பரவலான ஏற்பு: கடந்த சில ஆண்டுகளாக, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் (PLI) உள்ளிட்ட கொள்கைகளை அரசு அறிமுகம் செய்திருந்தாலும், கோவிட்-19 பாதிப்புக்கு மத்தியில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இவற்றால் கலவையான பலனை பெற்றுள்ளன என்று தினேஷ் அகர்வால் குறிப்பிட்டார்.
பரவலாக அமலுக்கு வரும் வகையில் ஜிஎஸ்டி முறையை மேலும் எளிமையாக்க வேண்டும் என்றும் அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
டிஜிட்டல்மயம்: இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்தியில் டிஜிட்டல்மயம் அதிகரித்து வருகிறது. இது வர்த்தக செலவுகளை குறைக்கிறது.
இந்தியாமார்ட் இணையதளத்திற்கு மாதந்தோறும் 90 மில்லியன் பயனாளிகள் வருவதாக கூறும் தினேஷ், நிறுவனம் பல்வேறு மொழிகளை புரிந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மனநிலை மாற்றம்: சிறு தொழில் நிறுவனங்கள் பாரம்பரியம் சார்ந்தவை. எனினும் அதிக அளவிலான வர்த்தக உரிமையாளர்கள் வளர்ச்சிக்காக சமபங்கை விட்டுக்கொடுக்க முன்வரும் நிலையில் அவர்கள் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்குச்சந்தையில் எஸ்.எம்.இ மேடையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், பல நிறுவன உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பரிசீலிக்கின்றனர்.
பணிச் சூழல்: கோவிட்-19 கற்றுத்தந்துள்ள முக்கியப் பாடங்களில் ஒன்று பணிச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றமும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கலந்த பணிசூழலில், நேரில் சந்தித்துக்கொள்வது எல்லா நேரங்களிலும் சாத்தியம் இல்லை என புரிய வைத்துள்ளது.
சப்ளை சைன்: பெருந்தொற்று சூழல் விநியோகச் சங்கிலியின் முக்கியத்தவத்தை எல்லோரும் புரிய வைத்துள்ளது. பொதுமுடக்க சூழலில், சப்ளை சைன் மூலம் மருத்துவ மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற முடிந்தது.
ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்