Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

போலி வங்கிக் கணக்கு; ரூ.231 கோடி பாக்கி: சரவணா ஸ்டோர்ஸை சுற்றும் சர்ச்சை!

செயல்படாத வங்கி கணக்கால் வங்கி அதிரடி நடவடிக்கை!

போலி வங்கிக் கணக்கு; ரூ.231 கோடி பாக்கி: சரவணா ஸ்டோர்ஸை சுற்றும் சர்ச்சை!

Friday May 07, 2021 , 1 min Read

தமிழகத்தில் பிரலபமாக இருக்கும் நகைக்கடை குழுமங்களில் முதன்மையானது சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்). சென்னையில் நகைகள் மற்றும் ஜவுளி விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், கடந்த 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியன் வங்கி இந்த சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்,

“சரவணா ஸ்டோர்ஸ (கோல்ட் பேலஸ்) நிறுவனத்தின் செயல்படாத வங்கிக் கணக்கு (என்.பி.ஏ) மோசடி வங்கிக் கணக்கு என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒழுங்குமுறை தேவைக்கேற்ப ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெரிவிகிறோம்," என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ்
மேலும், சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ்-ன் செயல்படாத வங்கிக் கணக்கில் ரூ.231 கோடி பாக்கி இருப்பதாகவும் இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சரவணா ஸ்டோர்ஸ் வங்கிக் கணக்கில் ரூ.230.74 கோடி பாக்கி உள்ளது. மேலும், இந்த செயல்படாத வங்கிக் கணக்கின் மோசடித் தன்மை நிதிகளை திருப்பிவிடுவதாக அமைந்துள்ளது.

முன்னதாக இதே இந்தியன் வங்கியின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட கிளை ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் வங்கிக் கணக்குக்கு 115.32 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


இதேபோல், தி. நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ்-க்கு சொந்தமான இரண்டு அசையா சொத்துக்களின் விற்பனை குறித்த அறிவிப்பை மார்ச் மாதமே இதே இந்தியன் வங்கி வெளியிட்டு இருந்தது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரார்கள் உத்தரவாதம் அளித்தவர்கள் மற்றும் உரிமை வைத்திருப்பவர்களிடமிருந்து ரூ.288 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


இதற்கிடையே, தமிழகத்தின் பிரபல வணிக நிறுவனமாக அறியப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மோசடியான வங்கிக் கணக்கு என்று இந்தியன் வங்கி அறிவித்திருப்பது வணிகர்கள் வட்டாரத்தில் கூடுதல் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தகவல் உதவி: ஹிந்து பிசினஸ்லைன் | தொகுப்பு: மலையரசு