மூன்றாவது நாளாக வரலாறு காணாது சரிந்த ரூபாய் மதிப்பு; காரணம் என்ன?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 3வது நாளாக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 3வது நாளாக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வின் முடிவில், 81.25 ரூபாயாக வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டிருந்தது. இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.24 காசுகளாக சரிந்துள்ளது.
காரணம்: அமெரிக்க ஃபெடரல் வங்கி கடந்த புதன்கிழமை அன்று வட்டி விகிதத்தை 75 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் அமெரிக்க டாலர் மற்றும் பத்திரைச் சந்தையின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது சர்வதேச அளவிலான நாணயங்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு காரணமாக, உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்ற இறக்கம் மற்றும் கிரீன்பேக்கிற்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சி ஆகியவற்றால் உள்நாட்டு எரிபொருள் விலை குறைப்பு பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போரால் உலக பொருளாதாரம் கடுமையான பின்விளைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், சீனா - தைவன் இடையிலான பிரச்சனையும் அச்சுறுத்தலை அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச அரசியலில் நிலவி வரும் நிலையற்ற தன்மை அந்நிய செலவாணி வர்த்தகத்தில் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, செப்டம்பர் 16 அன்று இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 545 பில்லியன் டாலராக இருந்தது, நவம்பர் 2021ல் எட்டப்பட்ட 642 பில்லியன் டாலரில் இருந்து கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.
இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.24 காசுகளாக சரிந்துள்ளது.