காற்றை சுவாசித்தால் மட்டும் போதுமா? கடித்தும் சாப்பிட வந்துவிட்டது பொறித்த காற்று!
காற்று காசுக்கு விற்கும் காலம் போய், காற்றை கடித்து சாப்பிடும் காலமும் வந்துவிட்டது. ஆம், இத்தாலியின் காஸ்டல்ஃப்ரங்கோ வெனேடோ பகுதியில் உள்ள ஃபீவா ரெஸ்டாரன்டின் மெனுவில் உள்ளது பொறித்த காற்று.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறை சாப்பிட்டு போராடித்து, போரிங் சமையலுக்கு பை சொல்லி ஓட்டலுக்கு படையெடுக்கும் டெக் யூகத்தாரின் நாவுக்கு விருந்தளிக்க, ஓட்டல்காரர்கள் ரகரகமாய் சிந்தித்து மெனு கார்டுகளை நிரப்பி வருகின்றனர்.
அப்படி, இத்தாலியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்டின் மெனு கார்டில் வாவ் அயிட்டம் ஒன்று இணைக்கப்பட்டு, மக்களை வாயை பிளக்க வைத்துள்ளது. அந்த டிஷ்ஷை சுவைத்தால், இனிப்போ, புளிப்பு சுவையோ உணர மாட்டீர்கள். ஏனெனில், அந்த பதார்த்தம் தூய சுவாசக்கற்றால் செய்யப்படுகிறது. ஆம், டிஷ்ஷின் பெயர் ‘பொறித்த காற்று’ 'Fried Air'.
இத்தாலியின் பிரபல செஃப்பான நிகோலா டினாட்டோ, ஃபுட்டிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பதார்த்தத்தை உருவாக்கியுள்ளார். இதற்காக, நிகோலாவும் அவருடன் பணிபுரியும் மற்றொரு செஃப்பும் இணைந்து பல மாதங்கள் ஆராய்ந்து புதுவகையான பொறித்த காற்று பதார்த்தத்தை உருவாக்கியுள்ளனர். காற்றை பொறித்து எடுப்பது அத்தனை எளிதல்ல என்கிறார் அவர்.
பதார்த்தத்தின் முதல் படியாய், மரவள்ளிக்கிழங்கு மாவை கொண்டு பானிப்பூரியின் குட்டிப் பூரிகள் போன்று செய்து கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் மேகங்கள். அதை எண்ணெயில் பொறித்து எடுத்து பின் உலர்த்துகின்றனர்.
இறுதியில், மெயின் மூலப்பொருளான காற்றை சுமார் 10 நிமிடங்களுக்கு பூரியினுள் உட்செலுத்துகின்றனர். பிறகு, பைனல் டச்சாக வெண்ணிற பஞ்சு மிட்டாயின் மீது பொறித்த காற்றை வைத்து, அழகிய மிதக்கும் மேகங்கள் போன்று தோற்றத்தை கொண்டு வருகின்றனர்.
'‘சின்னப்பூரிகளை மைக்ரோ ஓவனில் வைத்து சமைத்து எடுத்தால், இன்னும் மொறு மொறுப்பாக இருக்கும். ஆனால், கடிக்கும்போது பல்லில் ஓட்டிக்கொள்ளும் என்பதால் அம்முறையை கைவிட்டோம்” எனும் அவர், பல தரப்பட்ட முயற்சிகளுக்கு பிறகே பதார்த்ததை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆன்லைனில் பரவிவரும் இந்த பதார்த்தத்தின் விலை ரெண்டாயிரமாம்ம்ம்... காற்றை சுவைக்கும் அனுபவத்தை அளிப்பதால், பலரது பாராட்டுகளை பெற்று வந்தாலும், காற்றை புசிக்க வேண்டுமானால் 5ரூ லேஸ் பாக்கெட்டை திறந்தாலே போதுமே என்று கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.
காற்றுள்ளப் போதே தூற்றிக்கொள் என்பது போல காற்றுள்ள பூரியை ருசித்துக் கொள் என்று பலரும் இந்த புதுவகை பதார்த்தை ஒரு கை பார்த்து விட்டு தங்கள் அனுபவங்களை வைரலாக பதிவிட்டு வருகிறார்கள்.
பட உதவி : ruptly | தகவல் உதவி : http://feedytv.com