80,000 தாவரங்களை நட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் கேபிசி வெற்றியாளர்!
5 கோடி ரூபாய் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு நல்ல வீடு ஒரு கார், குழந்தைகளுக்கு நல்ல கல்வி என்று யோசிப்போம். ஆனால் க்ரோர்பதி நிகழ்ச்சியில் கோடிகள் வென்ற இவர் செய்தது ஆச்சர்யம்...
5 கோடி ரூபாய் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு நல்ல வீடு ஒரு கார் வாங்குவோம், குழந்தைகளுக்கு நல்ல கல்வியைப் கொடுப்போம், அவரவர் குடும்பங்களைக் கவனித்துக் கொள்வோம் என்றும் நீங்கள் கூறுவீர்கள்.
சமூகம் மற்றும் இயற்கைச் சூழலுக்காக வெற்றி பெற்ற பணத்தில் ஏதாவது செய்ய விரும்புபவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவீர்களா. அவர்களில் ஒருவர் தான் கேபிசி -5 வெற்றியாளர் சுஷில் குமார்.
கேபிசி வெற்றியாளர் சுஷில் குமார் 2011ல் ரூ.5 கோடி வென்றார். இப்போது அவர் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் பணியாற்றி வருகிறார். அவர் மை சாம்பா என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இதன் கீழ், அவர் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்காக தனியாகப் பணியாற்றி வருகிறார். இதன் கீழ் மரங்களை நட்டு வளர்ப்பது, காக்கைகளுக்கு கூடுகள் கட்டுவது, குழந்தைகளுக்காக சேவை செய்வது ஆகியவை அடங்கும்.
மோதிஹாரி (பீகார்) மாநிலத்தைச் சேர்ந்த சுஷில் குமார், உளவியலில் எம்.ஏ. மற்றும் பி.எட் பட்டம் பெற்றவர். இவர் கூட்டுக் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தில தந்தை, தாய், பாட்டி மற்றும் 5 சகோதரர்கள் உள்ளனர்.
ஒரு சகோதரரைத் தவிர எல்லோருக்கும் திருமணம் ஆகி விட்டது. சுஷிலுக்கும் திருமணமாகி, 8 வயதில் ஒரு மகள் உள்ளார், அவள் இப்போது 1ஆம் வகுப்பில் படிக்கிறாள். நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையில் ஏதாவது செய்ய விரும்பினால், நீங்கள் சமூகத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்குங்கள் என்று அவர் கூறுகிறார்.
மரக்கன்றுகளை நடவு செய்தல்
சுஷில்; சாம்பா டு சாம்பரன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவர் தாவரங்களுடன் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீடுகளில் தொடர்பு கொள்கிறார். இந்த முயற்சியில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். அவர் எங்கு சென்றாலும், செடியுடன் சென்று, மேலும் மேலும் மரங்களை நடுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
சுஷில் எந்த பொது இடத்திலும் மரங்களை நடவில்லை, மரங்கள் நடுவதற்கு வீடுகளைத் தேர்வு செய்கிறார். இந்த வீடுகளில் செண்பக மரம், வேப்பமரம், அரசமரம், ஆலமரம், குறுக்கத்தி, இலுப்பை மரக்கன்றுகள் போன்றவை நடப்படுகின்றன. இதற்காக அவர்கள் யாரிடமிருந்தும் நிதி உதவி பெறுவதில்லை. யாராவது உதவ விரும்பினால், அவர்களிடமிருந்து தாவரங்களாக மட்டுமே பெறுகிறார்.
பிறந்த நாள், திருமண நாள், ஆண்டு நிறைவு நாள் போன்ற சிறப்பு நாளில் அவர்களை மரங்களை நட்டு அந்த நாளை நினைவில் வைத்திருக்கும்படியான நாளாக மாற்ற அவர் மக்களை ஊக்குவிக்கிறார்.
சிட்டுக்குருவிகளுக்கும் சேவை செய்யப்படுகிறது
மரக்கன்றுகளை நடவு செய்வதோடு, குருவிகளுக்காகவும் இவர் சேவை செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலக கோரையா தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு, உலக கோரையா தினத்தன்று, தனது நண்பர் ஒருவரிடமிருந்து ஊக்கம் பெற்ற பின்னர் குருவிகளுக்கு கூடுகளை உருவாக்க அவர் முயற்சி எடுத்தார்.
இதுவரை 350 கூடுகளை கட்டியுள்ளார். இவற்றில் 20-25 இல் குருவிகளும் வந்து வசிக்கத் தொடங்கியுள்ளன. ஸ்க்ரம்ப்ளேகளைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் உதாரணமாக, அந்த இடம் காக்கைகளின் வந்து வாசிப்பதற்கும், பூனைகள் மற்றும் பிற பறவைகள் தொடாத உயரத்திலும் இருக்க வேண்டும்.
சுஷில் வாழ்க்கையின் மூன்று பகுதிகள்
சுஷிலின் வாழ்கையை பார்க்கும்போது, அவரது வாழ்க்கை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் விளக்குகிறார். முதல் கேபிசிக்கு முன் - இந்த காலகட்டத்தில் அவரது இலக்கு ஒரு அரசாங்க வேலையைப் பெற்று குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது கேபிசி வென்ற பிறகு - இக்காலகட்டத்தில் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. பல மாதங்களாக என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை. இது ஒவ்வொரு சாமானியரும் கனவு காணும் ஒரு வாழ்க்கையாகும்.
மூன்றாவது வாழ்க்கையில் ஏதோ ஒன்றை பெறுவதனால் வாழ்க்கை முழுமையடையாது என்பதை சுஷில் உணர்ந்த காலகட்டமாகும். சமூகத்திலிருந்து பெறுவதற்கு பதிலாக, நீங்கள் கொடுக்க வேண்டும். இதைத் தீர்மானித்த அவர், தினமும் 2-3 மணி நேரம் சமுதாயத்திற்காக செலவிடுகிறார்.
10 வருட கடின உழைப்பின் பலன் கேபிசி வெற்றி
தன் வாழ்க்கைக் கதை பற்றி பேசும்போது, சுஷில் குமார்,
'நான் 2001ல் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பின்னர் கேபிசி தொடங்கப்பட்டது. நான் நிகழ்ச்சியைப் பார்க்கும்போதெல்லாம், எல்லா பதில்களையும் கொடுக்க முடியும் என்று நினைத்தேன். அங்குதான் நான் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். நான் 2011ல் வெற்றி பெற்றேன். பாட்னாவில் ஆடிஷன் செய்யப்பட்டு, பின்னர் மும்பைக்குச் சென்றேன், பின்னர் நடந்தது அனைவருக்குமே தெரியும்.
தனது திட்டத்தைப் பற்றி கூறுகையில், சுற்றுச்சூழலுக்காக நான் தினமும் 3-4 மணிநேரம் செலவிடுகிறேன் என்று கூறுகிறார். இது தவிர, குழந்தைகளின் மனநிலையைப் தெரிந்துகொள்வதே எங்கள் நோக்கம். இந்த நாட்களில் செய்திகள் கவலை அளிக்கும் குற்றங்கள் தொடர்பானதாக உள்ளன.
பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மனநல மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அருகிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்கள்-ஆசிரியர்கள் சந்திக்கும் நாளில் ஒரு கூட்டத்தை நடத்துவோம். இதில், குழந்தைகள் ஏன் தவறான வழிகள் நோக்கி செல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்போம்? குழந்தைகளை குற்றத்திற்கு கொண்டு செல்வது என்ன என்றும் கண்டுபிடிப்போம்?
முடியும் தருணத்தில், இயற்கையும் சூழலும் நமக்கு நிறையக் கொடுத்தன என்று அவர் கூறுகிறார். இப்போது இயற்கைக்கு ஏதாவது கொடுக்க வேண்டிய நேரம் இது. இளைஞர்களுக்கு அனுப்பிய செய்தியில், நாம் தான் உண்மையான சுற்றுசூழல் என்றும், அதைக் காப்பாற்றுவது இளைஞர்களின் பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார்.
“இது அவர்கள் செயல்படும் நேரமாகும். அவர்கள் விழிப்புணர்வு பெறாவிட்டால் அவர்கள் கஷ்டப்பட வேண்டிய நாட்கள் வரக்கூடும். நாம் இப்போது இயற்கையை பராமரிக்கவில்லை என்றால், எதிர்க் காலத்தில் வாழ்வது மிகவும் கடினமாகிவிடும்.”
சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வது அவசியம், நமக்காக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் வரும் தலைமுறையினருக்காக நாம் இதைச் செய்ய வேண்டும், என்று முடிக்கிறார்.