ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலி: LIC ஐபிஓ-வை 40 சதவீதமாக குறைக்க திட்டம்!
உக்ரைன் போரின் காரணமாக முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், எல்ஐசி நிறுவனம் அதன் 40 சதவீத ஐபிஓவை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரின் காரணமாக முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், எல்ஐசி நிறுவனம் அதன் 40 சதவீத ஐபிஓவை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சுருக்கமாக எல்.ஐ.சி., உலகின் ஐந்தாவது பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். இதன் ஐபிஓவை பங்குச்சந்தையில் விற்க மத்திய அரசு முடிவுவெடுத்துள்ளது. இதன் மூலம், ரூ.63 ஆயிரம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
'பாலிசி' வைத்திருக்கும் 29 கோடி பேருக்குப் பத்து சதவீத பங்குகளை ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஐபிஒ வெளியிடுவதற்கு செபியின் அனுமதியையும் மத்திய அரசு பெற்றுள்ளது.
முதற்கட்டமாக 7 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 50000 கோடி அளவுக்கு திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது 5 சதவீத பங்குகளை மட்டுமே வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலீட்டாளர்களிடையே போதுமான ஆதரவு இல்லாததால் 5 சதவீத பங்குகளை மட்டும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
ப்ளூம்பெர்க் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
“விரைவில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி, உக்ரைன் போரின் காரணமாக முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், அதன் 40 சதவீத ஐபிஓவை குறைக்கலாம்,” என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் கிட்டத்தட்ட 7 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட இருப்பதாக கூறியது. ஆனால் தற்போது எல்ஐசியின் ஒட்டுமொத்த மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் இருந்து, பங்கு விற்பனை மதிப்பீடுகள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 30000 கோடி ரூபாய் அளவுக்கு திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. உக்ரைன் போர் மற்றும் இதர பொருளாதாரச் சூழல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஆர்வம் இல்லாததால் முன்பு கணிக்கப்பட்டதைவிட குறைவான அளவு பங்குகளையே எல்.ஐ.சி வெளியிட உள்ளது.
ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின் படி, ஐ.பி.ஓ மூலம் கிட்டத்தட்ட ரூ.21,000 கோடி, க்ரீன் ஷூ ஆப்ஷன் மூலம் ரூ.9,000 கோடி என மொத்தம் ரூ.30,000 கோடிக்கு முதலீட்டைத் திரட்ட எல்.ஐ.சி நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) வருகிற மே மாதம் 2-ம் தேதி வெளியாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எல்ஐசியின் ஐபிஓ, பேடிஎம்-ஐ விஞ்சி, இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: கனிமொழி