லாக்டவுன் 5: இறுதி ஊர்வலங்கள், திருமண விழா கட்டுப்பாடுகள் என்ன?
ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுனில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களில் தொடரும் கட்டுப்பாடுகள் என்ன?
மே 31ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுபெறும் நேரத்தில் தமிழக அரசு நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும்,
தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது, என அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடாந்து அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்கிறது. அதன்படி,
- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
ஜூன் 1ம் தேதி முதல் குறிப்பிடப்பட்டுள்ள மண்டலங்களில் மட்டும் பொது போக்குவரத்து அனுமதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் மக்கள் திருமணம் மற்றும் இறுதி ஊர்வல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல இதனை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
அதே போல், இந்த மண்டலங்களுக்குள் பொதுப் போக்குவரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பயணிக்க தற்போது உள்ளது படி, இ-பாஸ் வாங்கத் தேவையில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் சொந்த வாகனங்களில் செல்லவும் இ-பாஸ் தேவையில்லை.
ஆனால் மண்டலங்களுக்கு வெளியே செல்லவும், பிற மாநிலத்தில் இருந்து வரவும் இ-பாஸ் தேவை.
தகவல்: டிஐபிஆர்