Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

லாக்டவுன்5: சென்னை, மற்றும் இதர மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்ன?

ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் பட்டியல் இதோ:

லாக்டவுன்5: சென்னை, மற்றும் இதர மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்ன?

Sunday May 31, 2020 , 3 min Read

மே 31ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுபெறும் நேரத்தில் தமிழக அரசு நடத்திய ஆய்வுக்‌ கூட்டங்களின்‌ அடிப்படையில்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ தெரிவித்த கருத்துகளின்‌ அடிப்படையிலும்‌, கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழும்‌, மத்திய உள்‌ துறை அமைச்சகத்தின்‌ அறிவிக்கையின்‌ அடிப்படையிலும்‌, 

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்‌, கீழ்கண்ட சில தளர்வுகளுடனும்‌ நீட்டிப்பு செய்யப்படுகிறது, என அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள்‌, மறு உத்தரவு வரும்‌ வரை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌. அந்த கட்டுப்பாடுகள்,‌ தொற்றின்‌ தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள்‌ அளிக்கப்படும்‌ என்று அரசு தெரிவித்துள்ளது.

Lockdown5 relaxation tn

பெருநகர சென்னை காவல்‌ துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில்‌ (Except Containment Zones) கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும்‌ 1.6.2020 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது :


  • தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்களில்‌, அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும்‌ வாகனங்களில்‌ 20 சதவீத பணியாளர்கள்‌ அதிகபட்சம்‌ 40 நபர்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.


  • அனைத்து தனியார்‌ நிறுவனங்களும்‌ 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, இயன்ற வரை பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்க வேண்டும்‌.


  • வணிக வளாகங்கள்‌ (malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள்‌ மற்றும்‌ பெரிய கடைகள்‌ நகை, ஜவுளி போன்றவை 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்படலாம்‌. மேலும்‌, ஒரே நேரத்தில்‌ அதிகபட்சம்‌ 5 வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ கடைக்குள்‌ வருவதை உறுதி செயது, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ வகையில்‌, அனுமதிக்கப்பட வேண்டும்‌. கடைகளில்‌, குளிர்‌ச் சாதன இயந்திரங்கள்‌ இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.


  • மத்திய அரசு உத்தரவின்படி. 8.6.2020 முதல்‌ உணவகங்களில்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ நோக்கத்துடன்‌, உணவகங்களில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, உணவகங்களில்‌ குளிர்‌ சாதன இயந்திரங்கள்‌ இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.


  • டீ கடைகள்‌, உணவு விடுதிகள்‌ (7.6.2020 வரை - பார்சல்‌ மட்டும்‌) மற்றும்‌ காய்கறி கடைகள்‌, மளிகைக்‌ கடைகள்‌ ஆகியவை காலை 6 மணி முதல்‌ இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.


  • மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல்‌ தேநீர்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கையில்‌ 50 விழுக்காடு அளவு மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.


  • வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர்‌ தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்‌ TN e-pass இன்றி பயன்படுத்தலாம்‌.


  • ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர்த்து, இரண்டு பயணிகள்‌ மட்டுமே பயணிக்கலாம்‌. சைக்கிள்‌ ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.


  • முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ குளிர்‌ சாதன வசதியைப்‌ பயன்படுத்தாமல்‌ அரசு தனியாக வழங்கும்‌ நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.


பெருநகர சென்னை தவிர, தமிழ்நாட்டின்‌ பிற பகுதிகளில்‌ (நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர மற்ற பகுதிகளில்‌ - (Except Containment Zones), கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும்‌ 1.6.2020 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது:


  • தொழில்‌ நிறுவனங்கள்‌ 100 விழுக்காடு பணியாளர்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.


  • தகவல்‌ தொழில்நுட்பம்‌ மறறும்‌ தகவல்‌ தொழிலநுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்கள்‌ 100 விழுக்காடு பணியாளர்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, 20 விழுக்காடு பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்‌.


  • அனைத்து தனியார்‌ நிறுவனங்களும்‌ 100 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, இயன்ற வரை பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்க வேண்டும்‌.


  • வணிக வளாகங்கள்‌ (malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள்‌ மற்றும்‌ பெரிய கடைகள்‌, நகை, ஜவுளி போன்றவற்றை 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்படலாம்‌. மேலும்‌, ஒரே நேரத்தில்‌ அதிகபட்சம்‌ 5 வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ கடைக்குள்‌ இருக்கும்‌ பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ வகையில்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌. இதுவன்றி, கடைகளில்‌, குளிர்‌ சாதன இயந்திரங்கள்‌ இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.


  • டீ கடைகள்‌, உணவு விடுதிகள்‌ (7.6.2020 வரை - பார்சல்‌ மட்டும்‌) மறறும்‌ காய்கறி கடைகள்‌, மளிகைக்‌ கடைகள்‌ ஆகியவை காலை 6 மணி முதல்‌ இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக்‌ உள்ளிட்ட இதர கடைகள்‌ காலை 10 மணி முதல்‌ இரவு 8 மணி வரை இயங்கலாம்‌.


  • மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல்‌ உணவகங்களில்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ நோக்கத்துடன்‌, உணவகங்களில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, உணவகங்களில்‌ குளிர்‌ச் சாதன இயந்திரங்கள்‌ இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.


  • மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல்‌ தேநீர்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கையில்‌ 50 விழுக்காடு அளவு மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.


  • அத்தியாவசியமறறப் பொருட்கள்‌ உட்பட அனைத்து பொருட்களையும்‌, மின்‌ வணிக நிறுவனங்கள்‌ (E-Commerce) வழங்க அனுமதிக்கப்படுகிறது.


  • வாடகை மற்றும்‌ டாக்சி வாகனங்கள்‌ ஒட்டுநர்‌ தவிர்த்து மூன்று பயணிகளுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.


  • ஆட்டோக்கள்‌ இரண்டு பயணிகளுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள்‌ ரிக்ஷாவும்‌ அனுமதிக்கப்படுகிறது.


தகவல்: டிஐபிஆர்