'மலம் அள்ளும் தொழிலாளி டூ பத்மஸ்ரீ விருது’ - 'இன்ஸ்பிரிஷேன் நாயகி' உஷா!
7வயது இருக்கும் போதே உஷா மனிதக்கழிவுகளை அகற்றும் பணிக்கு தள்ளப்பட்டவர். தலைமுறை தலைமுறையாக உஷா குடும்பத்தினர் இந்த தொழிலையே செய்துவருகின்றனர்.
"எல்லோரும் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சுயமரியாதை மற்றும் கண்ணியம் முக்கியமானது” என்கிறார் உஷா சௌமர்.
வாழ்க்கையின் பல்வேறு துயரங்களைக் கடந்துவந்தவர் உஷா சௌமர். முரண்பாடுகள் நிறைந்த பயணத்தில், பல அவமானங்களைத் தொட்டு வந்தவர். கண்ணியத்தையும், சுயமரியாதையையும் நோக்கி நடைபோட்டவர் உஷா. இதோ அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
7வயது இருக்கும் போதே அவர் மனிதக்கழிவுகளை அகற்றும் பணிக்கு தள்ளப்பட்டவர். தலைமுறை தலைமுறையாக உஷா குடும்பத்தினர் இந்த தொழிலையே செய்துவருகின்றனர்.
”நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன்,” என்று தன் தொழிலை குறித்து குறிப்பிடுகிறார் உஷா. இதை மாற்ற முடியும் என்று அவர் நினைக்கவில்லை.
அவருடைய முதலாளிகள் அவரை ஒரு தீண்டதாகதவராகத்தான் பார்த்தார்கள். திருமணத்துக்குபிறகும் உடல்நிலை மோசமடைந்தபோதிலும், உஷா இந்த பணியைத் தொடர்ந்தார்.
அவர் சமூகத்தைச் சேர்ந்த மற்ற பெண்களுடன் இணைந்து வெறும் 230 ரூபாய் சம்பளத்துக்காக எண்ணிக்கூட பார்க்கமுடியாத, மனிதாபினமானமற்ற அந்த பணியை செய்யவேண்டிய சூழ்நிலையில் இருந்தார் உஷா.
டாக்டர் பிந்தேஷ்வர் பதாக் என்பவரால் அந்த வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார். அப்போது, மாற்று யோசனைக்கு உஷா தள்ளப்பட்டார். இதையடுத்து டாக்டர் பதக், உஷாவிடம் மாற்று யோசனைகள் குறித்து பேச முயற்சித்தபோது,
“நாங்கள் எங்கள் கணவரைத்தவிர மற்ற ஆண்களுடன் பேசுவதில்லை,” என கேட்க மறுத்தார். பின், பல்வேறு வற்புறுத்தலுக்குப்பின் பதாக் சொல்வதை கேட்க செவிமடுத்தார்.
எளிமையான கேள்விகளால் தொடங்கினார் டாக்டர்.பிந்தேஷ் பதாக். ”நீங்கள் ஏன் இந்த மாதிரியான வேலைகளை செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, உஷா மற்றும் அவருடன் இருந்த பெண்களுக்கு ஒருவித பதட்டம் ஏற்பட்டது. அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர். தங்களுக்குள்ளேயே கேள்வி கேட்கத்தொடங்கினர்.
டாக்டர் பதாக் மீது அவர்க்களுக்கு மரியாதை ஏற்பட்டது. மாற்று தொழில் குறித்தும் டாக்டர் அவர்களிடம் பேசினார். ஆனால், மாற்று தொழில் குறித்து அவர்களிடம் எந்த திறமையும், அதுகுறித்து பயிற்சியும் இல்லை என்பதால் பயந்தனர். இருந்தாலும் டாக்டரின் கேள்விகள் அவர்களுக்குள் ஒளியை பாய்ச்சியது.
டாக்டர் பதாக் உஷாவையும் மற்றவர்களையும் டெல்லியில் உள்ள சுலாப் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். உஷா தனது மாமியாரிடம் கேட்டபோது, எந்தவிதமான கவனத்தையும் செலுத்தாமல் தனது வாழ்க்கையைத் தொடருமாறு அறிவுறுத்தினார்.
டெல்லிக்குச் சென்று எதையும் சம்பாதிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? அன்றாட வேலை இல்லாமல் அவர் என்ன செய்வது என யோசித்தார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக உஷாவின் கணவர் தான் அவருக்கு ஆதரவாக நின்று வேறு எந்த காரணமும் இல்லாவிட்டால், குறைந்தபட்சம் ஒரு புதிய நகரத்தைக் காணும்படி அறிவுறுத்தி வழியனுப்பினார்.
“நான் முதல் முறையாக டெல்லி சென்றேன். முதல் முறையாக, நாங்கள் நன்றாக மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டோம். எங்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். முதல்முறையாக எங்களுக்கு இவ்வளவு மரியாதை வழங்கப்பட்டது,”என்கிறார் உஷா.
டெல்லியில் தையல் பயிற்சி, ஊறுகாய் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் வழங்கப்பட்டது. மனிதகழிவுகளை அகற்றும் பணியிலிருந்து வெளியேறி கண்ணியமான வாழ்க்கையை வாழமுடியும் என அவர்களுக்கு அப்போது நம்பிக்கை பிறந்தது.
“நாங்கள் தயாரிக்கும் பொருட்களை யார் வாங்குவார்கள்?’ என்று கேட்டோம். காரணம் சமூகத்தில் அப்படியான ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் ஊறியிருக்கிறது.
ஆனால் மெதுவாக மாற்றம் ஏற்பட்டது.
“நாங்கள் வேலை செய்யும் வீடுகளில் கூட, எங்கள் தயாரிப்புகளை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களின் குடும்ப விழாக்களுக்கு எங்களை அழைக்கின்றன. நாங்கள் அவர்களையும் அழைக்கிறோம், நாங்கள் இனி சமமற்றவர்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படவில்லை,” என்கிறார் உஷா.
டாக்டர் பதக்கால் தான் இது சாத்தியமானது என்கிறார் உஷா. அதேநேரத்தில் டாக்டர் பதக் அவர்களின் ‘சுலாப் இன்டர்நேஷ்னல்’ என்கிற சமூக நல அமைப்பு மூலம் பாகுபாடுகளை நீக்க கோரியும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களிடையே பிரசாரமும் நடத்தியுள்ளனர்.
இந்த அமைப்பு சார்பில் நாடு முழுவதும் 1.5 மில்லியன் வீட்டு கழிப்பறைகளை கட்டப்பட்டுள்ளது. துப்புரவு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இந்த அமைப்பு சார்பில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது சந்தேகத்திற்கு இடமின்றி மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் அதிகாரம் தரும் சூழலுக்கு வழிநடத்தப்பட்டுள்ளது. நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு சக்தியாக மக்களை தூண்டுவதற்கும் உஷா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
உயர்சாதி முதலாளிகளின் மீதமுள்ள உணவை உண்டு, அவர்கள் அணிந்து கொடுத்த ஆடைகளை உடுத்தி வந்த உஷா, இன்று உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையின் பாதிப்புகள் குறித்து, 10000 பேர் வரை உரையாற்றியிருக்கிறார். பல மேடைகளில் பேசியிருக்கிறார். தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். “மேடைகளில் பேசும்போது ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன்.
ஆனால் நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்? நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. எங்கள் இடம், எண்ணங்கள் மற்றும் செயல்களில் நாங்கள் சரியானவர்கள். நாங்கள் எங்கள் சொந்த கண்ணியம் மற்றும் உரிமைகளுக்காக பேசுகிறோம், என்று கூறும் அவர்,
"நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். என் வேலையின் காரணமாக எனக்கு எப்போதும் காய்ச்சல் இருந்தது, மயக்கம் ஏற்பட்டது, வயிற்று வலி இருந்தது,” என்று தன் பழையை நிலை குறித்து நினைவு கூர்கிறார் உஷா.
மனித கழிவுகளை அகற்றும் தொழிலிருந்து 2003-லிருந்து வெளியேறிவிட்டார் உஷா. இன்றும் அந்த தொழில் இருப்பவர்களைக்கண்டால் உடனடியாக அவர்களைச் சந்தித்து வேலையை விட்டுவிடும்படி கூறி ஆபத்துகளை விளக்குகிறார். கண்ணியத்துடனும், மரியாதையுடன் வாழ அவர்களுக்கு உதவுகிறார்.
உலகம் முழுவதும் பயணம் செய்து, பல்வேறு நபர்களைச் சந்திதுள்ளார் உஷா. அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
“எனக்கு எதுவும் தெரியாது. டாக்டர் பதக் எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார்,” என்று தாழ்மையுடன் கூறுகிறார்.
தகவல் உதவி - indianwomenblog