சர்வதேச தரவரிசையில் முதல் இடம் பிடித்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்!
உலகக் குத்துச்சண்டை போட்டியில் தனக்கென ஓர் இடம் பிடித்து பல பதக்கங்களுடன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மேரி கோம் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்னும் பட்டத்தை பெற்றுள்ளார். சர்வதேச குத்துச்சண்டை அமைப்பான ஏஐபிஏ வெளியிட்ட தரவரிசைப் பட்டியிலில் மேரி கோம் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் ஆறாவது முறையாக தங்கம் வென்று உலக சாதனைப்படைத்தார் மேரி கோம். இந்த 48 கிலோ பிரிவு மகளிர் குத்துச்சண்டையில் அவர் பெற்ற தங்கம் சர்வதேச தரவரிசையில் அவரை உயர்த்தியுள்ளது. அதாவது மொத்த வெற்றிகளின் எண்ணிக்கையில் 1700 புள்ளிகள் பெற்று ஏஐபிஏ-வின் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனை என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
மனிப்பூரைச் சேர்ந்த மேரி கோம் குத்துச்சண்டையில் 6 தங்கப்பதங்களை பெற்ற முதல் பெண், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.
2001ல் தனது முதல் பயணத்தை வெள்ளிப் பதக்கத்துடன் துவங்கிய இவர், அதனைத் தொடர்ந்து நடந்த சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்றார். 5 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் அயர்லாந்தை சேர்ந்த கேத் டேயலருடன் சமமாக இருந்தார் தற்பொழுது 6வது தங்கம் வென்று 7 பதக்கங்களுடன் புதிய சாதனைப் படைத்து இன்று முன்னிலை வகிக்கிறார்.
அடுத்த வருடம் நடக்கவிறுக்கும் ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ பிரிவு இல்லாததால் 51 எடை பிரிவில் பங்கேற்கத் தயாராகி வருகிறார் இந்த தாய்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த ஆண்டு போலந்தில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கமும், பல்கேரியா போட்டியில் வெள்ளியும் வென்றுள்ளார்.
இவரை தொடர்ந்து 51 எடை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பிங்க்கி ஜங்கரா மற்றும் மனிஷா மௌன் 54 எடை பிரிவில் 8வது இடத்தில் உள்ளனர். அடுத்து 57 எடைப்பிரிவில் சோனியா லெதர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லாததால் அவரது எடைப்பிரிவில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
64 கிலோ போட்டியில் சிம்ரஞ்சித் கௌர் 4 வது இடத்திலும் எல் சரிதா தேவி 16வது இடத்தையும் பிடித்துள்ளனர். இறுதியாக 69 கிலோ எடைப்பிரிவில் லோவ்ளினா 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தகவல் உதவி: தினமணி | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்