படித்தது எம்பிஏ; விற்பது பால் பொருட்கள்: லட்சத்தில் சம்பாதிக்கும் சந்தீப்!
பன்னாட்டு நிறுவனத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு பாலகத்தைத் துவங்கி, அதிலிருந்து மில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டுபவரின் கதை இது.
ஹரியானாவைச் சேர்ந்த பிரதீப் ஷியோரன் எம்பிஏ முடித்தபின் நீண்ட காலம் பன்னாட்டு நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றினார். திடீரென பணிவாழ்க்கையில் போர் அடிக்க, வேலையைவிட்டு தன் சொந்த கிராமம் திரும்பினார்.
அவர் கிராமத்தில், 'பாக்தி பாலகம்' என்ற பெயரில் ஐந்து இடங்களில் சுவையான பால் விற்பனை நிலையம் தொடங்கினார். பிரதீப் இப்போது பல வகையான பால் பொருட்களை விற்பனை செய்கிறார். சுய தொழிலில் தந்தையின் வெற்றியைக் கண்டு அவர் மிகவும் வியந்திருக்கிறார்.
24 வகையான நாட்டு இன மாடுகள், சார்க்கி தாத்ரியில் இருந்து குஜராத் வரை பரவியுள்ளது. 'பாக்தார்' (பாக்தி என்ற சொல் இதிலிருந்து பெறப்பட்டது) இந்திய ஹரியானாவில் உள்ள சார்க்கி தாத்ரியின், மந்தி பிரானு கிராமத்தில் வசிக்கும் பிரதீப் ஷியோரன், பன்னாட்டு நிறுவனங்களில் நீண்ட நாட்கள் வேலைசெய்த பின்னர், ரோஹ்தக்கின் ஐந்து இடங்களில் ருசியான பால் விற்பனை செய்தார்.
பால் விற்பனையில் 2018 டிசம்பர் 17 முதல் ஒவ்வொரு மாதமும் லடசக்கணக்கான ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
பிரதீப் ஷியோரன் பால் விற்பனை தொடங்கிய காலத்தில் இருந்தே நன்றாகச் சம்பாதிக்கத் தொடங்கினார், அவரது வெற்றியைப் பார்த்த அவரின் தந்தையால் இதை நம்ப முடியவில்லை. ரோஹ்தக்கில் தொடங்கிய பால் விற்பனை, பல இடங்களுக்கு பரவத் தொடங்கியது.
கடந்த ஆண்டு முசோரியின் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் ‘பாக்தி பாலகத்தின் வெற்றி குறித்து பேச பிரதீப் அழைக்கப்பட்டார்.
ஹரியானா உட்பட முழு இந்தியாவின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக பால் இருந்து வருகிறது. கடந்த ஒன்றரை தசாப்தமாக, குளிர் பானங்களை நோக்கிய போக்கு அதிகரித்துள்ளது. பால் மற்றும் தயிர் மீதான இளைஞர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரிப்பதே அவரின் முயற்சி, என்கிறார் பிரதீப்.
எனவே அவர் தனது தொடக்கத்தை ஒரு வணிகமாக மட்டுமல்லாமல் ஒரு சவாலான மாற்றமாக எடுத்துக்கொள்கிறார். படித்த பிறகு, பிரதீப் ஹேவல்ஸ், பெர்கர் பெயிண்ட் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தார், ஆனால் அவரால் அங்கு நேசித்து பணிபுரிய முடியவில்லை.
சொந்தமாக சில தொழில்களை தொடங்குவது பற்றி யோசிக்கத் தொடங்கினார் சந்தீப். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மட்டுமே சம்பாதிப்பதற்கான முழு வாய்ப்புள்ள இரண்டு தொழில்கள் என்று அவர் நம்புகிறார். சிறுவயது முதலே கிராமத்தின் காலநிலையில் வாழ்ந்து வந்து வந்ததால் சந்தீபிற்கு அதன் மதிப்பு புரிந்திருக்கிறது.
அந்த நொடி முடிவெடுத்து, திடீரென தனது கிராமத்திற்குத் திரும்பிய பிரதீப், நாட்டு மாடுகளை வைத்து பால் கறந்து விற்கும் தொழிலைத் தொடங்கினார். சில மாதங்களுக்குள், இந்த வியாபாரத்தில் அவர் நல்ல லாபம் கண்டார். மக்கள் தங்கள் பாலை விரும்பத் தொடங்கினர். அதைவைத்து, அவர் கடைகளைத் தொடங்கி புதிய ப்ராண்ட் பெயர் வைத்து தனது பால் பொருட்களை விற்கத் துவங்கினார்.
இதுவே அவரின் வெற்றியின் ஆரம்பமாக அமைந்தது. இன்னும் வரும் வருடங்களில் பல மாநிலங்களில் இவரின் பால் பொருள் விற்பனை சிரகை விரிக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.