தினமும் 1 லட்சம் மக்களுக்கு மருத்துவச் சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள 'DocsApp'
முன்னணி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்களை, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அணுக வழி செய்யும் DocsApp செயலி இதுவரை 10 மில்லியன் நிதி திரட்டியுள்ளது.
இந்தியாவில் மொத்தம், 1.50 லட்சம் மருத்துவ வல்லுனர்களே இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. 130 கோடி மக்கள் கொண்ட நாட்டில் இது மிகவும் குறைவான எண்ணிக்கை தான். முதல் கட்ட நகரங்களில் மட்டும் மருத்துவ வசதி சிறப்பாக இருப்பது இந்த இடவெளியை இன்னும் அதிகமாக்குகிறது.
இதற்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில், 2015ல் சதிஷ் கண்ணன் மற்றும் இன்பசேகர் தீனதாயளன், ’டாக்ஸ் ஆப்’ (DocsApp) செயலியை உருவாக்கினர். 400 வல்லுனர்கள் உள்பட, 5,000 டாக்டர்களை தனது மேடையில் கொண்டுள்ள இந்த சேவை தினமும், 7,000 நோயாளிகளுக்கு சேவை அளிக்கிறது.
யுவர் ஸ்டோரியுடனான நேர்காணலில் இணை நிறுவனர் சதீஷ் கண்ணன், நிறுவனத்தின் வளர்ச்சி திட்டம் தொடர்பாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
"எங்கள் செயலி வாயிலாக மிகவும் தொலைதூர பகுதியில் உள்ள நோயாளிகள் கூட எங்கள் மேடையை பயன்படுத்தி வருகின்றனர். 65 சதவீத பயனாளிகள் கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர்,” என்கிறார் அவர்.
தற்போது 10 நபர் மட்டுமே கொண்டிருக்கும் குழுவை 300 பேர் கொண்ட குழுவாக அதிகரிப்பதற்கான முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஒரு நல்ல சேவையின், செயல்பாடு நிதித் திரட்டுவது என்றும் நம்புவதாக சதீஷ் கூறுகிறார். தினமும் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு சேவை அளிப்பதை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. இது தங்கள் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக இருக்கும் என்றும் நிறுவனம் நம்புகிறது.
"இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சங்கிலி மருத்துவமனை கூட 70 மருத்துவமனைகள் தான் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் தினமும் 10,000 நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிக்க முடிகிறது,” என்கிறார் சதிஷ்.
Docs App, ஐந்து மொழிகளில் பயன்பாடு வசதியை கொண்டுள்ளது. வீடியோ, அரட்டை உரையாடல் மற்றும் போன் அழைப்பு வாயிலாக டாக்டர்களை தொடர்பு கொள்ள உதவுகிறது.
"எங்கள் சேவை அனைத்து வகையான வலைப்பின்னல்களுக்கும் பொருத்தமானது. டாக்டர்களுடன் மக்கள் தொடர்பு கொள்ள வைப்பதே எங்கள் இலக்கு,” என்கிறார் சதிஷ்.
நிறுவனம், தனது மேடையில் உள்ள டாக்டர்கள் எண்ணிக்கையை 18 மாதங்களில், 20,000 மாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை வளர்த்தெடுப்பதில் பலவித சவால்கள் இருக்கின்றன என்கிறார் சதிஷ். உதாரணமாக, பெண் நோயாளிகள், பெண் டாக்டர்களிடமே பேச விரும்புவதாகக் கூறுகிறார்.
"இந்தியாவில் பெரும்பாலான மருத்துவச் செலவுகள், காப்பீடு மூலம் அல்லாமல், கையில் உள்ள தொகை மூலமே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இது போன்ற ஒரு சேவை மேடையை உருவாக்கும் போது, உள்ளூர் தேவைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அப்போது தான் தொழில்நுட்பம் பயனளிக்கும்,“ என்கிறார் சதிஷ்.
அவர் தலைமைப் பண்பிற்கான மூன்று மடங்கு விதி பற்றியும் பேசுகிறார். ஒரு குழு அல்லது வருவாய் 3 மடங்கு அதிகரிக்கும் போது, குழு, முதலீட்டாளர்கள் மற்றும் தயார்ப்பு மாற்றத்தை கையாள்வதில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது என்கிறார். நிறுவனர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் மாறத் தயாராக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
"பெரிய அளவில் வளர்ச்சி காண, பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். வளர்ச்சி அடையும் போது இவ்வாறு செய்யவில்லை எனில் வர்த்தகத்தை நிரிவகிப்பது கடினமாகிவிடும்,” என்கிறார்.
சிறிய நகரங்களில் வசிக்கும் 430 மில்லியன் இந்தியர்களை சென்றடைவதை Docs App இலக்காகக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களைச் சென்றடைவதும் எளிதாக இருக்கிறது. இதன் மூலம் மருத்துவ வசதியையும் எளிதாக வழங்கலாம்.
"எங்கள் பங்குதாரர்கள் உதவியோடு இரத்த மாதிரிகளை சேகரித்து, மருந்துகளை விநியோகிக்கிறோம். செயலி எல்லாவற்றுக்கும் மையமாக இருக்கிறது. வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்கிறார் சதிஷ்.
தமிழில்: சைபர்சிம்மன்