‘நான் பார்த்துக் கொள்கிறேன்’- பரிதவித்த மாணவிக்கு உதவிக் கரம் நீட்டிய எம்.எல்.ஏ ரோஜா!
மாணவிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் ஆந்திராவின் எம்.எல்.ஏ ரோஜா!
நடிகையும், ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜாவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள் அன்று அவர் செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பச்சிகப்பள்ளம் கிராமத்தைச் சேரந்தவர் புஷ்பகுமாரி. இவரது பெற்றோர்கள் இறந்துவிட, ஆதரவற்ற நிலையில், திருப்பதியில் உள்ள பெண்கள் குழந்தைகள் நலக் காப்பகத்தில் தங்கி படித்து வந்தார். அங்கிருக்கும், மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்த புஷப்குமாரிக்கு மருத்துவராகவேண்டும் என்ற லட்சியம்.
இதையடுத்து, நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றுள்ளார். தனது கடின உழைப்பால் தேர்வுகளில் வெற்றிபெற்று முன்னேறிக்கொண்டிருந்தவருக்கு, பொருளாதாரம் முட்டுக்கட்டை போட்டது. போதிய பணம் இல்லாததால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், யாருடைய உதவியும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் ஆந்திராவின் எம்.எல்.ஏ ரோஜா.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள் விழாவின் போது, புஷ்பகுமாரியை தான், தத்தெடுத்து அவரது மருத்துவப்படிப்புக்கான செலவை தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார் ரோஜா. அவரின் இந்த செயல் சமூகவலைதளங்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ளது.
’குமாரி மருத்துவராவது ஜெகன்மோகன்ரெட்டி பிறந்தநாளுக்கான பரிசு,’ என்று குறிப்பிட்டுள்ளார் ரோஜா.
ஏழைக்குழந்தைகளை படிக்கவைப்பதற்காக, அவர்களின் பெற்றோர்களுக்கு பொருளாதார உதவியை செய்யும் திட்டம் தான் அம்மா வோடி திட்டம். அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த சீரிய திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் பதிவு செய்திருந்த புஷ்புகுமாரியை தானாகவே தத்தெடுக்க முன்வந்துள்ளார் ரோஜா.
புஷ்பகுமாரி தங்கியிருக்கும் குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு திடீரென விசிட் செய்துள்ளளார் ரோஜா. அங்கிருப்பவர்களுக்கு ஒரே ஆச்சரியம். அப்போது புஷ்பாவிடம் பேசியவர்,
’நீ உன் மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு ஆகும் முழுச் செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்,’ என உறுதியளித்துள்ளார். அப்போது, ’நான் மருத்துவம் படித்து ஏழைக்களுக்கு சேவை செய்வேன் என்று புஷ்பாகுமாரி தெரிவித்தார்.’
எந்தவொரு குழந்தைக்கும் வழங்கப்படக்கூடிய பரிசுகளில் முக்கியமானது கல்விதான்.
குறிப்பாக பெண்களுக்கான கல்வி என்பது நாட்டைய வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல உதவும். அந்த காப்பகத்தில் இருந்தவர்களும், புஷ்பாவும், ரோஜாவின் இந்த செயலினால் மனம் நெகிழ்ந்தனர். ஆந்திர அரசாங்கம் பல்வேறு வகையில் அம்மாநில மக்களின் கல்விக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: மலையரசு