80 லட்சத்துக்கும் அதிக தடுப்பூசி: இந்தியா புதிய சாதனை!
வாழ்த்திய பிரதமர் மோடி!
ஒரே நாளில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை செய்துள்ளது. திருத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி கொள்கையின் முதல் நாளான திங்களன்று கிட்டத்தட்ட 81 லட்சம் (80,95,314) தடுப்பூசிகள் போட்டுள்ளது இந்தியா.பதிவு செய்தது.
திருத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி கொள்கையின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்காக உள்நாட்டில் கிடைக்கும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. தடுப்பூசியின் தற்போதைய கட்டம் 2021 ஜூன் 7 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடவும், கோவிட் -19 தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள மற்றவர்களை ஊக்குவிக்கவும் அவர் ஒரு தெளிவான அழைப்பை விடுத்தார். அதன்படி தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் நாளில் மத்தியப் பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி செலுத்தி இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலமான இங்கு ஜூன் 21 அன்று 15,42,632 டோஸ் கோவிட் -19 தடுப்பூசியும், அதைத் தொடர்ந்து மற்றொரு பாஜக தலைமையிலான மாநிலமான கர்நாடகா 10,67,734 தடுப்பூசி அளவுகளையும் செலுத்தியுள்ளன.
இதேபோல், 6,74,546 டோஸுடன் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி மருந்துகளை வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்தையும், பீகார் (4,70,352) நான்காவது இடத்தையும் பிடித்தன. 5,02,173 தடுப்பூசி செலுத்தி குஜராத் ஐந்தாவது இடத்தையும் பிடித்தது.
அசாம் (3,30,707), தமிழ்நாடு (3,28,321), மகாராஷ்டிரா (3,78,945), ராஜஸ்தான் (4,30,439), ஹரியானா (4,72,659) ஆகியவற்றுடன் மற்ற ஐந்து மாநிலங்கள் 3.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகளை செலுத்தி இருக்கின்றன. இந்த சாதனையை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில்,
“இந்த தடுப்பூசி அளவுகள் எண்ணிக்கை மகிழ்ச்சியை தருகிறது. பல குடிமக்களுக்கு தடுப்பூசி கிடைத்ததை உறுதிப்படுத்த கடுமையாக உழைக்கும் அனைத்து முன்னணி வீரர்களுக்கும் தடுப்பூசி மற்றும் பெருமையையும் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெல் டன் இந்தியா!" என்றுள்ளார்.